அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய ஷாஹீன் ஏவுகணையை பரிசோதித்த பாகிஸ்தான் !
இஸ்லாமாபாத்: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய ஷாஹீன் ஏவுகணையை பாகிஸ்தான் இன்று பரிசோதனை செய்துள்ளது..
சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அண்மைக் காலமாக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் ஏவுகணை சோதனையின் மூலம் அந்நாடு அணு ஆயுதம், ஏவுகணை தயாரிப்பு உள்ளிட்டவைகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. இதன் மூலம் அணு ஆயுதம் தொடர்பான சோதனையில் பாகிஸ்தானும் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில், இரண்டாயிரத்து 750 கி.மீ தொலைவு வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட, அணு ஆயுதங்களைத் தாங்கிக் செல்லும் புதிய ஷாஹீன் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் இன்று நடத்தியுள்ளது.
இது தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கும். இந்த ஏவுகணை அணுகுண்டு மற்றும் வழக்கமான வெடிகுண்டுகளை சுமந்து கொண்டு 2,750 கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது. இன்று நடந்த ஏவுகணை சோதனை, அனைத்து அம்சங்களிலும் வெற்றி கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சோதனை எங்கு நடத்தப்பட்டது என்ற விவரத்தை தெரிவிக்க அந்நாடு மறுத்துள்ளது.
ஷாஹீன் ரக ஏவுகணைகளை தயாரித்து சோதனை செய்துவரும் பாகிஸ்தான் ஷாஹீன்-1, ஷாஹீன்-2 சோதனைகளை கடந்த ஆண்டு நடத்திய நிலையில் கடந்த 11-ம் தேதி ஷாஹீன்-3 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிலையில், இன்றைய ஷாஹீன் 1-ஏ ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications