மோடி சொன்ன ஒற்றை வார்த்தை.. மொத்த கூட்டமும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு.. தாய்லாந்தில்
பேங்காக்: பிரதமர் நரேந்திர மோடி சொன்ன, ஒற்றை வார்த்தையைத் தொடர்ந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஒட்டு மொத்த இந்திய வம்சாவளி சமூக மக்களும் எழுந்து நின்று கைதட்டி (standing ovation) தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
இன்று காலை டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. ஆசியான் மாநாடு, கிழக்காசிய மாநாடு மற்றும் கூட்டுப் பொருளாதார மாநாடு ஆகியவற்றில் மோடி பங்கேற்கிறார்.
இதன் ஒரு அம்சமாக பாங்காக்கில் இந்திய நேரப்படி இன்று மாலை சுமார் 6.15 மணிக்கு துவங்கிய, 'SawasdeePMModi' என்ற இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாார்.

திருக்குறள் மொழி பெயர்ப்பு
நிகழ்ச்சியின் துவக்கத்தில், குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி, நினைவு நாணயம் ஒன்றையும், திருக்குறளின் 'தாய்' மொழி பெயர்ப்பையும் மோடி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் உரையை ஆரம்பித்தபோது, நமது நாட்டின், தமிழ் உள்ளிட்ட, பல்வேறு மொழிகளிலும் மோடி வணக்கம் என்பதை தெரிவித்தார். மேலும், தனது உரையின்போது, திருக்குறள் என்பது வாழ்க்கைக்கான வழிகாட்டியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
|
உலகம் முழுக்க ஆதரவு
மேலும் அவர் கூறுகையில், உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயம் தெரிந்திருக்கும். தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கான, விதை தூவப்படுவதற்கான மிகப்பெரிய காரணம் ஒன்றை, எங்களது அரசு சமீபத்தில் அகற்றியது. நாம் சரியான ஒரு முடிவை எடுக்கும்போது, உலகம் முழுக்க இருந்து அதற்கான ஆதரவு குரல்கள் எதிரொலிக்கும். தாய்லாந்திலும் அந்த ஆதரவை நான் பார்க்க முடிகிறது, என்று தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம்
ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான அதிரடி உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகள், யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டு, அது நடைமுறைக்கு வந்துவிட்டது. பிரதமர் மோடி இது தொடர்பாக தான் மறைமுகமாக இவ்வாறு பேசினார்.

நாடாளுமன்றத்திற்கு பாராட்டு
மோடி இவ்வாறு பேசியதும், ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினரும் எழுந்து நின்று கைதட்டி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இதைப் பார்த்து புன்முறுவல் பூத்த நரேந்திர மோடி, இது நரேந்திர மோடி என்ற தனி நபருக்கான வரவேற்பு, பாராட்டு கிடையாது. இந்திய நாடாளுமன்றத்துக்கும், அதன் ஒவ்வொரு எம்பிக்களுக்கும், சென்று சேர வேண்டிய பாராட்டாக, இதை நான் பார்க்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications