உலகின் தற்போதைய தேவை கருணை... போப் பிரான்சிஸ் கிறுஸ்துமஸ் நற்செய்தி!
வாடிகன்: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருநாள் கிறிஸ்தவர்களால் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது. வாடிகனில் போப் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முன்னதாக ஈராக்கில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் அகதிகளாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுடன் போப், தொலைபேசியில் உரையாடினார். அவர்கள் படும் கஷ்டம் தனக்கு தெரியும் என்றும், ஈராக்கிலுள்ள கிறிஸ்தவ அகதிகள் தனது நெஞ்சத்துக்கு அருகிலேயே இருப்பதாகவும் உருக்கமாக போப் தெரிவித்தார்.

பின்னர், உலகப் புகழ்பெற்ற வாடிகன் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் கலந்துகொண்டு மக்களுகு ஆசி வழங்கினார். கருணையும் பொறுமையும் கடவுளை அடைவதற்கான வழி என்று போப் பிரான்சிஸ் கூறினார்.
உலத்தில் கருணை தற்போதைய தேவையாக இருக்கிறது. ஆண்டவரின் ஔியை ஏற்க மக்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். உலகில் ஊழலும், இருளும் மண்டிக்கிடக்கின்றன. அமைதி என்ற ஒளியை வைத்தே நாம் அவற்றை அகற்ற வேண்டும் என்று போப் தெரிவித்தார்.
பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கலந்துகொண்டு திருப்பலி பாடல்களை பாடினர். பல்வேறு நாடுகளில் வந்திருந்த ஏராளமானோர் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications