பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் ரஷ்யா.. புதின் முடிவால் ஐரோப்பிய நாடுகள் கலக்கம்!
மாஸ்கோ : உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, அண்டை நாடான பெலாரசில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப் போவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவியாக ஆயுதங்கள் வழங்கி ரஷ்யாவுக்கு எதிராக போரிட உதவி புரிந்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

ரஷ்யா உக்ரைன் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்தப் போர் ஓராண்டைக் கடந்து நீடித்து வருகிறது.
Recommended Video
இந்நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரசில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப் போவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். பெலாரசில் அணு ஆயுதங்களை நிறுவியதும், அதன் கட்டுப்பாடு அனைத்தும் ரஷியாவிடமே இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் பேசும்போது அவர் ஒப்புக்கொண்டதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை மீறாது என்று கூறியுள்ள ரஷ்ய அதிபர் புதின், இதை அமெரிக்கா தனது ஆயுதங்களை ஐரோப்பாவில் நிலைநிறுத்துவதுடன் ஒப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே அணு ஆயுதங்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1991-ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சரிவின்போது உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் ரஷ்யா அணு ஆயுதங்களை வைத்திருந்தது. சோவியத் யூனியன் சரிவை தொடர்ந்து உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் தனி நாடுகளாகப் பிரிந்ததால் அங்கிருந்து 1996ஆம் ஆண்டு வாக்கில் அனைத்து அணு ஆயுதத்தையும் ரஷ்யா திரும்பப் பெற்றுக்கொண்டது.
கடந்த ஆண்டு பெலாரசில் இருந்து ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெலாரசில் ரஷியா அணு ஆயுதத்தை நிலைநிறுத்த இருப்பதால் ஐரோப்பிய நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.
அணு ஆயுதம் தொடர்பான ரஷ்யாவின் இந்த நடவடிக்கை தொடர்பாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் டேனிலோவ் பேசுகையில், பெலாரசை அணு ஆயுதப் பணயக் கைதியாக ரஷ்யா வைத்துள்ளதாகவும், ரஷ்யா மீதுள்ள பயத்தினாலேயே பெலாரஸ் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications