உக்ரைனில் பெரிய அடி! ஆர்வமில்லாத ரஷ்ய வீரர்கள்! மத்திய கிழக்கிலிருந்து பெரிய டீமை களமிறக்கும் புடின்
மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யா சார்பாக போரிடுவதற்காக 16 ஆயிரம் பேரை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து களமிறக்குவதாக அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் அறிவித்து இன்றோடு சரியாக 15 நாட்கள் ஆகிறது. இதுவரையிலான போரில் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்ய தரப்பிலும் ராணுவ வீரர்கள் பலர் பலியாகி உள்ளனர்.
இதுவரை இந்த போரில் ரஷ்யா முழு பலத்தை பயன்படுத்தவில்லை. ரஷ்யா மிகவும் குறைவாகவே தாக்குதல் நடத்தி வருகிறது.

தன்னார்வலர்கள்
அதேபோல் வான்வெளி தாக்குதல்களையும் உக்ரைன் மீது ரஷ்யா இன்னும் நடத்தவில்லை. இந்த போரில் உக்ரைன் தரப்பில் பலர் தன்னார்வலர்களாக போரிட்டு வருகிறார்கள். அந்நாட்டு பொது மக்கள் பலர் ராணுவத்தில் தன்னார்வலர்களாக இணைந்து போராடி வருகிறார்கள். அதேபோல் ஐரோப்பாவை சேர்ந்த பலரும் உக்ரைனுக்கு சென்று அங்கு போராடி வருகின்றனர். அண்டை ஐரோப்பா நாடுகளை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் பலர் உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக போரிட்டு வருகின்றனர்.

16 ஆயிரம் பேர்
இந்த நிலையில்தான் தற்போது ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் தன்னார்வலர்கள் பலர் களமிறங்க உள்ளனர். ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாக 16 ஆயிரம் பேர் போர் செய்ய உள்ளனர். இவர்கள் எல்லோரும் மொத்தமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து களமிறக்கப்பட உள்ளனர். இந்த போரில் ரஷ்யாவிற்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன.

ரஷ்ய படைகள்
ரஷ்ய படைகள் ஆர்வமின்றி இருக்கின்றன. ஏற்கனவே ரஷ்ய படையில் 15 ஆயிரம் பேர் பலியாகிவிட்டனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. அதோடு உக்ரைனில் தாக்குதல் நடத்த சில ரஷ்ய வீரர்களுக்கே ஆர்வம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்தே தற்போது ரஷ்ய அதிபர் புடின் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 16 ஆயிரம் தன்னார்வலர்கள் போரில் களமிறக்கப்பட உள்ளனர்.

எங்கிருந்து?
சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அமீரகத்தில் உள்ள நாடுகளில் இருந்தும் வீரர்கள் பலர் ரஷ்ய படைக்கு ஆதரவாக களமிறங்க உள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் ரஷ்யாவிற்கு உதவ வேண்டும் என்று வருகிறார்கள். பணம் வேண்டும் என்று இவர்கள் வரவில்லை. அதனால் இவர்களை ரஷ்ய படைகளுடன் இணைந்து உக்ரைனில் போரிட அனுமதிக்க போகிறோம் என்று ரஷ்ய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

புடின் மனமாற்றம்
முதலில் இவர்களை ரஷ்ய படைகளுடன் இணைந்து உக்ரைனில் போரிட புடின் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ரஷ்ய படைகளின் மதிப்பை அது குறைவாக மதிப்பிடுவது போல இருக்கும். இதனால் தன்னார்வலர்களை புடின் அனுமதிக்கவில்லை. ஆனால் போரில் ரஷ்ய தரப்பிற்கு சேதம் அதிகரித்து வருவதால் தற்போது தன்னார்வலர்களை அனுமதிக்கும் முடிவை புடின் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications