"இந்த 3 கண்டிசனை ஒப்புக்கொள்ளுங்கள்.." இறங்கி வரும் அதிபர் புதின்! முடிவுக்கு வரும் போர்? பரபர தகவல்
மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், ராணுவ நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றால் உலக நாடுகள் சில நிபந்தனைகளை ஒப்புகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
உக்ரைன் நாட்டின் மீது முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்க கடந்த வியாழக்கிழமை அதிபர் புதின் உத்தரவிட்டார். அதன்படி 5 நாட்களாக உக்ரைன் நாட்டில் கடும் போர் நிலவி வருகிறது.
முதலில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம், அதன் பின்னர் பீரங்கி, டாங்கி ஆகியவற்றை அனுப்பி முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கியது. இதனால் உக்ரைன் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போர்
ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் அறிவித்துள்ளன. குறிப்பாகச் சர்வதேச நிதி பரிவர்த்தனை முறையாக அறியப்படும் swift முறையில் இருந்தும் விலக்கவும் உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. ஆனால், இதையெல்லாம் கண்டு புதின் தனது முடிவுகளைப் பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

பேச்சுவார்த்தை
உக்ரைன் தலைநகர் கீவ் நகர் உள்ளிட்ட பல நகரங்களில் போர் உச்சமடைந்தது. இதனால் அங்குச் சிக்கிய இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வந்த நிலையில், நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. பெலாரஸ் நாட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஷ்யா கூறியது. அதன்படி இன்றைய தினம் ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்பு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

நிபந்தனைகள்
இதனிடையே ராணுவ நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என அதிபர் புதினிடமும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. புதின் ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடும் முன்னரே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் அவரை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இதனிடையே இம்மானுவேல் மாக்ரோன் மீண்டும் அதிபர் புதினை சந்தித்து பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அப்போது புதின், உலக நாடுகள் தனது சில நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் மட்டுமே ராணுவ நடவடிக்கையைக் கைவிடுவது குறித்து யோசிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

கிரிமியா தீபகற்பம்
ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டே இந்த கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் இதை எந்தவொரு நிபந்தனைகளும் இல்லாமல் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தீர்வு சாத்தியமாகும் என்று புதின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முதலில் கிரிமியா தீபகற்பத்தின் மீதான ரஷ்ய இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும். அடுத்து உக்ரைன் நாட்டின் ராணுவ பலம் குறைக்கப்பட வேண்டும்.

முக்கிய கோரிக்கை
மூன்றாவதாக முக்கியமாக உக்ரைன் நடுநிலை நாடாக இருக்க வேண்டும். அதாவது நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டை இணைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். உக்ரைன் நாட்டில் இனி நேட்டோ வீரர்களைப் பயிற்சி செய்ய அனுமதிக்கக் கூடாது என இந்த மூன்று நிபந்தனைகளை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனிடம் ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications