Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இங்க பாருங்க.. உக்ரைன் எல்லையில் நவீன ஆயுதங்களுடன், ரஷ்ய படைகள்.. அம்பலப்படுத்திய சாட்டிலைட் படம்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் உள்ளது. இந்நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை அதிகரித்துள்ளது. இதுதொடர்பான செயற்கைகோள் படங்கள் வெளியாகி பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளன.

Recommended Video

    Ukraine எல்லையில் குவிக்கப்பட்ட Russian Army.. காட்டிக்கொடுத்த Satellite image

    உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இருநாடுகளுக்கு இடையே 2014 முதல் எல்லை பிரச்னை உள்ளது. தற்போது நாட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயற்சிக்கிறது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளதால் ரஷ்யா கோபமடைந்துள்ளது.

    மேலும் 2021 நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது.

    ஒரு லட்சம் வீரர்கள்

    ஒரு லட்சம் வீரர்கள்

    ஒரு லட்சத்துக்கும் அதிக வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் போருக்கு ரஷ்யா வழிவகுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்கா உள்பட ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை கண்டித்து வருகின்றன.ஆனால் ரஷ்யா, பயிற்சிக்கு தான் படைகளை குவித்துள்ளதாகவும், போர் தொடுக்கும் எண்ணம் இல்லை எனவும் மறுத்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.

     செயற்கைகோள் படங்கள்

    செயற்கைகோள் படங்கள்

    இந்நிலையில் தான் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ள படைகள் குறித்த படங்கள் வெளியாகி உள்ளன. மேக்சர் நிறுவன (Maxar) உயர் தொழில்நுட்ப திறன் கொண்ட செயற்கைகோள் பெலாரஸ், ​​கிரிமியா, மேற்கு ரஷ்யாவில் படம் எடுத்துள்ளன. இதில் ரஷ்ய படைகள் ஏராளமாக குவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    தாக்குதலுக்கு ரெடி

    தாக்குதலுக்கு ரெடி

    இதன்மூலம் தரைவழி, வான்வெளி தாக்குதலுக்கு தயார் நிலையில் ரஷ்யா இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் பெரும்பாலான படைகள் உக்ரைனின் வடக்கு, வடகிழக்கு பகுதிகளை நோக்கி உள்ளது. மேலும் உக்ரைன் தென்கிழக்கு, கிரிமியாவில் அதிகளவில் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    உக்ரைனுக்கு உதவ வாய்ப்பு

    உக்ரைனுக்கு உதவ வாய்ப்பு

    இதற்கிடையே படைகளை வாபஸ் வாங்குவது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன், ரஷ்யா அதிபர் விலாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. அமெரிக்க உள்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி வருகின்றன. ஆனால் ரஷ்யா பிடிகொடுக்காமல் உள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அமெரிக்க உள்பட பிற நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கவும், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+