இங்க பாருங்க.. உக்ரைன் எல்லையில் நவீன ஆயுதங்களுடன், ரஷ்ய படைகள்.. அம்பலப்படுத்திய சாட்டிலைட் படம்
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் உள்ளது. இந்நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை அதிகரித்துள்ளது. இதுதொடர்பான செயற்கைகோள் படங்கள் வெளியாகி பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளன.
Recommended Video
உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இருநாடுகளுக்கு இடையே 2014 முதல் எல்லை பிரச்னை உள்ளது. தற்போது நாட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயற்சிக்கிறது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளதால் ரஷ்யா கோபமடைந்துள்ளது.
மேலும் 2021 நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது.

ஒரு லட்சம் வீரர்கள்
ஒரு லட்சத்துக்கும் அதிக வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் போருக்கு ரஷ்யா வழிவகுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்கா உள்பட ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை கண்டித்து வருகின்றன.ஆனால் ரஷ்யா, பயிற்சிக்கு தான் படைகளை குவித்துள்ளதாகவும், போர் தொடுக்கும் எண்ணம் இல்லை எனவும் மறுத்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.

செயற்கைகோள் படங்கள்
இந்நிலையில் தான் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ள படைகள் குறித்த படங்கள் வெளியாகி உள்ளன. மேக்சர் நிறுவன (Maxar) உயர் தொழில்நுட்ப திறன் கொண்ட செயற்கைகோள் பெலாரஸ், கிரிமியா, மேற்கு ரஷ்யாவில் படம் எடுத்துள்ளன. இதில் ரஷ்ய படைகள் ஏராளமாக குவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு ரெடி
இதன்மூலம் தரைவழி, வான்வெளி தாக்குதலுக்கு தயார் நிலையில் ரஷ்யா இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் பெரும்பாலான படைகள் உக்ரைனின் வடக்கு, வடகிழக்கு பகுதிகளை நோக்கி உள்ளது. மேலும் உக்ரைன் தென்கிழக்கு, கிரிமியாவில் அதிகளவில் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

உக்ரைனுக்கு உதவ வாய்ப்பு
இதற்கிடையே படைகளை வாபஸ் வாங்குவது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன், ரஷ்யா அதிபர் விலாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. அமெரிக்க உள்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி வருகின்றன. ஆனால் ரஷ்யா பிடிகொடுக்காமல் உள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அமெரிக்க உள்பட பிற நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கவும், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications