பாலியல் வல்லுறவுக்கு எதிராக முதல் முறையாக சட்டம் இயற்றிய சோமாலிலாந்து
தனது சுதந்திரத்தை பிரகடனம் செய்துகொண்டபின், முதல் முறையாக ஆஃப்பிரிக்க நாடான சோமாலிலாந்து பாலியல் வல்லுறவுக்கு எதிராக சட்டம் இயற்றியுள்ளது.
சமூகத்தால் அவமானப்படுத்தப்படுவதைத் தவிர்க்க, வன்கொடுமை செய்த ஆணுக்கே, பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இதுவரை அங்கு நிலவி வந்தது.
தற்போது இயற்றப்பட்டுள்ள சட்டத்தின்படி பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்கள் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.
சோமாலியா நாட்டிலிருந்து பிரிந்து, 1991-ஆம் ஆண்டிலேயே தன்னை சுதந்திர தனி நாடு என்று தன்னை சோமாலிலாந்து பிரகடனம் செய்துகொண்டாலும், சர்வேதேச நாடுகளால் அந்நாடு தனிநாடாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.
இதுவரை சோமாலியாவில் பாலியல் வல்லுறவுக்கு எதிரான சட்டம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்துவரும் பாலியல் வல்லுறவுக் குற்றங்களைத் தடுக்க இந்தப் புதிய சட்டம் உதவும் என்று சோமாலிலாந்து நாடாளுமன்றத்தின் அவைத்தலைவர் பாஷே மொகமத் ஃபாரா பிபிசியிடம் தெரிவித்தார்.
"தற்போது கூட்டுப் பாலியல் வல்லுறவுகளும் நடக்கின்றன. பாலியல் குற்றங்களை முழுமையாகத் தடுப்பதே இச்சட்டத்தின் நோக்கம்," என்றும் அவர் கூறியுள்ளார்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியதன் பின்னர் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக இத்தகைய சட்டம் ஒன்றுக்குக் காத்திருந்தததாக 'உமென்'ஸ் அஜெண்டா ஃபோரம்' எனும் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ஃபைசா அலி யூசுஃப் பிபிசியிடம் கூறினார்.
செயல்படும் நிறுவனங்களைக் கொண்ட ஜனநாயகத்தை உடைய நாடாக, சர்வதேச சமூகத்தால் தாம் பார்க்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன், தம்மைத் தனி நாடாக அறிவித்துக்கொண்ட சோமாலிலாந்து இந்தப் புதிய சட்டத்தை இயற்றியுள்ளது என்று பிபிசியின் ஆன் சோய் கூறுகிறார்.
பிற செய்திகள்:
- வட கொரியா- தென் கொரியா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளன
- இந்தியர்கள் இனி கடல் வழியாக ஹஜ் புனிய யாத்திரை செல்லலாம்
- தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கருக்கு கோல்டன் குளோப் விருது
- இரண்டு லட்சம் சல்வடோர் மக்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற உத்தரவு
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்














Click it and Unblock the Notifications