"கடவுள நேர்ல பார்க்கணுமா.. நான் காட்டுறேன்".. வடிவேலு பாணியில் அலறவிடும் மதப்போதகர் போஸ்டர்
ப்ரெட்டோரியா: கடவுளை நேரில் பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று அவரை காட்டப் போகிறேன் என மதப் போதகர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் தென்னாப்பிரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு திரைப்படக் காட்சியில் வடிவேலு, கடவுளை காட்டுகிறேன் எனக் கூறி கிராம மக்களிடம் ஆயிரக்கணக்கில் பணமும் வசூலித்து கடைசியில் வேற வெலவில் அவர்களை ஏமாற்றுவார். இந்த போஸ்டரை பார்த்ததும், நம்மூர் காரர்களுக்கு அந்த நகைச்சுவைதான் நினைவுக்கு வரும்.
ஆனால், பாவம்.. தென் ஆப்பிரிக்கா மக்களோ இதை உண்மை என்று நம்பி தங்கள் வீடு, நகைகளை எல்லாம் விற்று லட்சக்கணக்கில் அந்த மதப் போதகருக்கு கட்டணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

கடவுள் பெயரில் அரங்கேறும் மோசடி
கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் பேர்வழிகள், எல்லா மதங்களிலும் எல்லா நாடுகளிலுமே இருக்கவே செய்கிறார்கள். இந்தியாவில் கூட மதப்போதகர்கள் என்று கூறிக்கொள்ளும் பலர், இதுபோன்ற மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் ஏராளமான உள்ளன. பிறவியிலேயே வாய் பேசு முடியாதவர்கள், கண் தெரியாதவர்களை ஒரே நிமிடத்தில் குணமாக்கும் அதிசய வீடியோக்களையும் நாம் பார்த்திருப்போம். இதுபோன்ற ஒரு சம்பவம்தான் தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ளது.

பிரபல பாஸ்டர்
தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற மதப்போதகராக இருப்பவர் புடேலி. பல ஜெபக்கூட்டங்களை நடத்துவதும், அங்கு வரும் மக்களின் நோய்களை உடனுக்குடன் குணப்படுத்துவதிலும் புடேலி கைத்தேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. எனவே இவரது ஜெபக்கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அவர்களிடம் அதிக அளவில் பணம் வசூல் செய்து வரும் புதேலி, ஒருசில ஆண்டுகளிலேயே பல அடுக்கு தனி பங்களா, ரூ.1 கோடி மதிப்பிலான சொகுசு கார் என வாங்கி 'செட்டில்' ஆகிவிட்டார்.

"கடவுளை காண அரிய வாய்ப்பு"
இந்நிலையில், இந்த கிறிஸ்துமஸுக்கு வழக்கம் போல ஜெபக்கூட்டம் போடுவதை காட்டிலும், வேறு ஏதாவது புதிதாக செய்யலாம் என யோசித்திருக்கிறார் பாஸ்டர் புதேலி. அதன்படி, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் பல பகுதிகளில் பாஸ்டர் புதேலியின் படங்களுடன் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதில், "கடவுளை பார்க்க ஆசைப்படுபவர்களா நீங்கள்.. உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.. கிறிஸ்துமஸ் தினத்தன்று உங்கள் அனைவருக்கும் நான் கடவுளை காட்ட போகிறேன்" என எழுதப்பட்டுள்ளது.

நாளைதான் கிறிஸ்துமஸ்..
மேலும், கடவுளை நேரில் பார்க்க வேண்டும் என விரும்புவோர் ரூ.17 லட்சத்தை கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டரின் இந்த பேச்சை நம்பி, பலரும் தனது நகை, நிலங்களை விற்று அவர் கூறிய கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். நாளைதான் கிறிஸ்துமஸ். எப்படியும் பாஸ்டர் கடைசி வரை கடவுளை காட்டப் போவதில்லை. வீட்டை விற்று பணம் செலுத்தியவர்கள் என்ன செய்ய போகிறார்களோ? நாளை மறுதினம் தெரியவரும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications