3ம் உலகப்போருக்கு முன்னதாக மனிதர்கள் செவ்வாயில் குடிபுக வேண்டும்: எலோன் மஸ்க்
பூமியிலுள்ள உயிரினங்கள் மொத்தமும் அழிந்துவிடுமுன் செவ்வாய் கிரகத்தில் குடிபெயர்ந்துவிட வேண்டும் என எலோன் மஸ்க் கூறியுள்ளார்.
நியூயார்க்: மூன்றாம் உலகப்போர் மூண்டு, பூமியிலுள்ள உயிரினங்கள் முற்றாகத் துடைத்தொழிக்கப்படுமுன் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் குடிபுக வேண்டும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி துறையில் முக்கிய பணிகளை செய்து வருகிறது. இந்த தனியார் நிறுவனம் 'எலோன் மஸ்க்' என்ற கோடிஸ்வரருக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.

நாசாவை விட பெரியது
நாசாவை விட இந்த நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய நிறுவனம் ஆகும். சமீபத்தில் தான் இவர் செவ்வாய்கிரகத்துக்கு கார் ஒன்றை அனுப்பினார். இந்நிலையில், செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் முன்னோடிச் சோதனைகள் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் தொடங்கலாம் என அதிரடியாக அறிவித்துள்ளார் எலோன்.

3வது போர் வருவதற்குள்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் எலோன். அப்போது அவர், "அடுத்த உலகப் போர் வெடிப்பதற்கு முன் மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்குக் குடியேறுவது அவசியம்.

இல்லாவிட்டால் அழிந்து விடுவோம்
உலகளாவிய அணு ஆயுதப் போர் மூண்டு, பூமியிலுள்ள உயிரினங்கள் முற்றாகத் துடைத்தொழிக்கப்படுமுன் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் குடிபுக வேண்டும். அப்போது தான் மீண்டும் தேவை ஏற்படும் போது பூமியில் மனித நாகரீகத்தை உண்டாக்க முடியும்" என அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரக மக்கள்
செவ்வாய் கிரகத்தில் குடியிருப்பு ஒன்றைத் தோற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார் எலோன் என்பது குறிப்பிடத்தக்கது. பூமியைப் போல அல்லாமல் செவ்வாய் கிரகத்தில் வசிக்கவிருக்கும் மக்களுக்கு அதிக உரிமைகள் இருக்கும் என அவர் கூறி வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications