சிலருக்கு வயிறு எரியுது! இந்தியாவின் வளர்ச்சி பொறுக்க முடியல! பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் சுளீர் பதில்
நிக்கோஸியா: "தீவிரவாதத்தைப் பயன்படுத்தி இந்தியாவை ஒருகாலும் பணிய வைக்க முடியாது" என்று பாகிஸ்தானைக் குறிப்பிட்டு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளுடன் சுமுகமாக உறவைப் பேணவே இந்தியா விரும்புவதாகக் கூறிய ஜெய்சங்கர், அதற்காகத் தீவிரவாதத்தைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் கூறினார்.
மேலும், சீனாவுடனான இந்தியாவின் உறவு சீராக இல்லை என்றும், எல்லை விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ளாத போக்கைக் கடைப்பிடிப்பதே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான் மோதல் போக்கு
சமீபகாலமாகவே, இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக ஐநா உள்ளிட்ட சர்வதேச தளங்களில் காஷ்மீர் விவகாரத்தைப் பாகிஸ்தான் எழுப்பியது இந்தியாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அண்மையில் நடந்த ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானைத் தீவிரவாத நாடு என்றும், தீவிரவாதத்தால் திவாலாகி நிற்கும் நாடு எனவும் ஜெய்சங்கர் பகிரங்கமாகச் சாடினார். இது, பாகிஸ்தானுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது.

"இந்தியாவைச் சீண்டும் அண்டை நாடுகள்"
இந்நிலையில், சைப்ரஸ் நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட ஜெய்சங்கர், அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: இன்றைக்கு இந்தியா எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறதோ அதே அளவுக்கான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலக வல்லரசுகளுக்கு இணையாக இந்தியா அசுர வளர்ச்சி பெற்றிருப்பதை சில அண்டை நாடுகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அவை ஏதேனும் ஒரு வகையில் இந்தியாவைச் சீண்டிக் கொண்டே இருக்கின்றன.

"சுமுகமான உறவையே விரும்புகிறோம், ஆனால்.."
இந்தியாவைச் சீண்டினால் இப்போதெல்லாம் அதற்கு இரட்டிப்பாகப் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அண்டை நாடுகளுடன் சமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்காகத் தீவிரவாதத்தைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு அண்டை நாடு (பாகிஸ்தான்) இந்தியாவைத் தீவிரவாதம் மூலமாக அச்சுறுத்தி விடலாம் என நினைத்தது. ஆனால், தீவிரவாதத்தால் இந்தியாவை ஒருகாலும் அடிபணிய வைக்க முடியாது என்பதை அவர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள்.

சீனா எல்லை விவகாரம்
இந்தியா - சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக சுமுகமான உறவு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா காலத்தில் இந்த பிரச்சினை இன்னும் அதிகமானது. எல்லைக் கோட்டுப் பகுதியை மாற்றியமைக்க இந்தியா அனுமதிக்காததே, சீனா உடனான பிரச்சினைக்குக் காரணம். எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்திய மண்ணில் அந்நியர்கள் கால்பட்டு விடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications