கொரோனா இன்னும் முடியல.. அடுத்த வேரியண்ட் ஓமிக்ரானை விட ஆபத்தானதாக இருக்கும்.. ஹூ நிபுணர் வார்னிங்
ஜெனீவா: கொரோனா வைரஸின் அடுத்த வேரியண்ட் ஓமிக்ரானை விட அதிக ஆபத்தானதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி கொண்டிருக்கும் வேளையில் புதிது, புதிதாக வேரியண்ட்கள் வந்து உலக நாடுகளை அலற வைத்து வருகிறது. டெல்டா போனால், ஓமிக்ரான், ஓமிக்ரான் போனால் அடுத்த வைரஸ் என்று மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர்.

மக்களின் அலட்சியம்
ஓமிக்ரான் வைரஸ் வேரியண்ட் அலை தணிந்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், அடுத்தகொரோனா வேரியண்ட் முன்பு இருந்ததை விட விட அதிகமாக பரவக்கூடும் என்று ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் வைரஸ் முடிந்து விட்டது என்று கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் ஹாயாக இருக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் நிபுணர் எச்சரிக்கை
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் (WHO) தொற்றுநோயியல் நிபுணரும், கொரோனா தொழில்நுட்ப முன்னணியாளருமான டாக்டர் மரியா வான் கெர்கோவ் கொரோனா வைரஸிடம் மக்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆபத்தானதாக இருக்கும்
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், ' தொற்றுநோய் நம்மிடம் இருந்து விலகி விட்டது என்று மக்கள் கவனக்குறைவாக இருக்க கூடாது. தொற்றுநோய் நம்மிடம் இருந்து இன்னும் விலகவில்லை. அடுத்த கொரோனா வைரஸ் வேரியண்ட் ஓமிக்ரானை விட அதிக தொற்றுநோய் கொண்டதாக இருக்கும். இதற்கு முன்னர் இருந்த வேரியண்ட்களை விட இது மிகவும் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கலாம். ஒருவேளை இது மிகவும் ஆபத்தானதாக கூட மாறலாம். எதிர்கால வேரியண்ட்கள் நமது நோயெதிர்ப்பு சக்தியை எளிதில் தகர்த்து விடவும் வாய்ப்பு இருக்கிறது.

தடுப்பூசிகள் பலன் தருமா?
மேலும் எதிர்கால வேரியண்ட்களுக்கு எதிராக தடுப்பூசிகள் செயலதிறன் குறைவாக இருக்கலாம். ஆனாலும் வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் மிக முக்கியமானது. தடுப்பூசிகள் உயிரிழப்புகளை தடுக்க உதவும். ஏனெனில் ஓமிக்ரான் அலையின் போது நோயின் தீவிர தன்மையையும், இறப்புகளையும் தடுப்பூசிகள் கட்டுப்படுத்தின என்று தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications