கொரோனா இன்னும் முடியல.. அடுத்த வேரியண்ட் ஓமிக்ரானை விட ஆபத்தானதாக இருக்கும்.. ஹூ நிபுணர் வார்னிங்
ஜெனீவா: கொரோனா வைரஸின் அடுத்த வேரியண்ட் ஓமிக்ரானை விட அதிக ஆபத்தானதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி கொண்டிருக்கும் வேளையில் புதிது, புதிதாக வேரியண்ட்கள் வந்து உலக நாடுகளை அலற வைத்து வருகிறது. டெல்டா போனால், ஓமிக்ரான், ஓமிக்ரான் போனால் அடுத்த வைரஸ் என்று மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர்.

மக்களின் அலட்சியம்
ஓமிக்ரான் வைரஸ் வேரியண்ட் அலை தணிந்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், அடுத்தகொரோனா வேரியண்ட் முன்பு இருந்ததை விட விட அதிகமாக பரவக்கூடும் என்று ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் வைரஸ் முடிந்து விட்டது என்று கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் ஹாயாக இருக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் நிபுணர் எச்சரிக்கை
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் (WHO) தொற்றுநோயியல் நிபுணரும், கொரோனா தொழில்நுட்ப முன்னணியாளருமான டாக்டர் மரியா வான் கெர்கோவ் கொரோனா வைரஸிடம் மக்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆபத்தானதாக இருக்கும்
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், ' தொற்றுநோய் நம்மிடம் இருந்து விலகி விட்டது என்று மக்கள் கவனக்குறைவாக இருக்க கூடாது. தொற்றுநோய் நம்மிடம் இருந்து இன்னும் விலகவில்லை. அடுத்த கொரோனா வைரஸ் வேரியண்ட் ஓமிக்ரானை விட அதிக தொற்றுநோய் கொண்டதாக இருக்கும். இதற்கு முன்னர் இருந்த வேரியண்ட்களை விட இது மிகவும் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கலாம். ஒருவேளை இது மிகவும் ஆபத்தானதாக கூட மாறலாம். எதிர்கால வேரியண்ட்கள் நமது நோயெதிர்ப்பு சக்தியை எளிதில் தகர்த்து விடவும் வாய்ப்பு இருக்கிறது.

தடுப்பூசிகள் பலன் தருமா?
மேலும் எதிர்கால வேரியண்ட்களுக்கு எதிராக தடுப்பூசிகள் செயலதிறன் குறைவாக இருக்கலாம். ஆனாலும் வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் மிக முக்கியமானது. தடுப்பூசிகள் உயிரிழப்புகளை தடுக்க உதவும். ஏனெனில் ஓமிக்ரான் அலையின் போது நோயின் தீவிர தன்மையையும், இறப்புகளையும் தடுப்பூசிகள் கட்டுப்படுத்தின என்று தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications