கொரோனாவுக்கு வெற்றிகரமான மருந்து.. இப்போதைக்கு வாய்ப்பே இல்லை.. உலக சுகாதார அமைப்பு வார்னிங்
ஜெனிவா: கொரோனா வைரஸுக்கு "பயனுள்ள தடுப்பூசிகள்" கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும்", முழுமையான தீர்வை தரும் வெற்றிகரமான மருந்து இப்போதைக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
Recommended Video
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில், 18,102,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 689,625 பேர் இறந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகியவை மிக மோசமான பாதிக்கப்பட்டுள்ள 3 நாடுகள் ஆகும்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெற்றிகரமானவை அல்ல
அவர் ஜெனிவாவில் இந்த அறிக்கை வாசித்து பேசியதாவது: "பல தடுப்பூசிகள் இப்போது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன. மேலும் தொற்றுநோயைத் தடுக்க உதவும் பல பயனுள்ள தடுப்பூசிகளைக் கொண்டிருப்போம் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். இருப்பினும், இப்போதைக்கு 100 சதவீதம் வெற்றிகரமாக குணப்படுத்த்க்கூடிய மருந்து கிடைக்க வாய்ப்பு இல்லை.

முககவசம் அணிதல்
இப்போதைக்கு, கொரோனா பரவலை தடுக்க, பொது சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டின் அடிப்படை விஷயங்களை பின்பற்ற வேண்டும். உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைத் தலைவர் மைக் ரியான் அனைத்து நாடுகளையும் முககவசம் அணிதல், சமூக விலகல், கை கழுவுதல் மற்றும் சோதனை போன்ற சுகாதார நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக இடைவெளி
இப்போதைக்கு, கொரோனா பரவலை நிறுத்துவதற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டின் அடிப்படைகளை பின்பற்ற வேண்டும் . நோயாளிகளை பரிசோதித்தல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல் மற்றும் அவர்களின் தொடர்புகளை கண்டுபிடித்து தனிமைப்படுத்துதல். இதையெல்லாம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுதல், சமூகத்திற்கு தொற்று குறித்து புரிதலை எற்படுத்துதல், பரவலை கட்டுப்படுத்த அரசு உரிய அதிகாரம் அளித்தல், முகமூடி அணிதல்,, தவறாமல் கைகளை சுத்தம் செய்வது மற்றும் மற்றவர்களின் இருமல் பிறருக்கு பராமவல் தடுத்த போன்றவற்றை செய்ய வேண்டும். .

ஒற்றுமை அவசியம்
சுகாதார அமைப்பை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள், தொடர்புத் தடமறிதல் மற்றும் சீர்குலைந்த சுகாதார சேவைகள் சீக்கிரம் மறுதொடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.. பாதுகாப்புகளையும் கண்காணிப்பையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இன்று நாம் ஒன்றாகச் செயல்பட்டால், உயிரைக் காப்பாற்ற முடியும், அனைவரும் சேர்ந்து வாழ்வாதாரங்களை காப்பாற்ற முடியும்" இவ்வாறு கூறினார்.

உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸின் மூலத்தை கண்டுபிடிக்க சீனாவுக்கு சென்ற உலக சுகாதார அமைப்பின் குழுவினரை பற்றி அந்த அறிக்கையில் அவர் கூறுகையில் , "சீனாவுக்குச் சென்ற உலக சுகாதார அமைப்பின் குழு இப்போது வைரஸ் தோற்றத்தை அடையாளம் காண மேலும் கூட்டு முயற்சிகளுக்கு அடித்தளம் அமைப்பதற்கான தங்கள் பணியை முடித்துவிட்டது. இந்த முயற்சிகளின் விளைவாக உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஒரு சர்வதேச அணிக்கான ஆய்வுகள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கான விதிமுறைகளை சீன வல்லுநர்கள் வரைவு செய்துள்ளனர். சர்வதேச குழுவில் சீனா மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். வைரஸை அடையாளம் காண வுஹானில் தொற்றுநோயியல் ஆய்வுகள் தொடங்கும் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications