டிரம்ப் ஜெயித்து ஜனாதிபதி ஆனால் இந்தியர்களை வெளியேற்றி விடுவார்.. 3வது வகுப்பு பையனின் அதிரடி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதித்துள்ள கோடீஸ்வரர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஒரு வினோதமான சவால் வந்துள்ளது. ஒரு சிறுவன் அவரைப் பார்த்து சரமாரியாக கேள்வி கேட்டுள்ளான். அவன் கேட்ட கேள்விகள்தான் இப்போது வைரல் ஆகியுள்ளன.
அந்தப் பையன் தனது நோட்டில் எழுதியிருந்த அந்தக் கேள்விகளையும், டிரம்ப்பை விமர்சித்திருந்ததையும் அவது ஆசிரியர் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார்.
3வது வகுப்புப் பசங்க இந்த நாட்டை நடத்தலாம் என்றும் அவர் அதற்குத் தலைப்புக் கொடுத்துள்ளார். அது இப்போது வைரல் ஆகியுள்ளது. கொலம்பஸைச் சேர்ந்தவன் அந்த சிறுவன்.

3வது வகுப்புப் பையன்
அந்த சிறுவன் 3வது கிரேட் படித்து வருகிறான். தனது நோட்டுப் புத்தகத்தில் அவன் எழுதியுள்ள வாசகங்கள் சிந்திக்க வைப்பவையாக உள்ளன.

இந்தியர்களைப் பற்றியும்
அந்த சிறுவனின் குறிப்பில் இந்தியர்களைப் பற்றியும் இடம் பெற்றுள்ளது. இந்தியர்களின் முக்கியத்துவத்தை அவன் அழகாக எடுத்துரைத்துள்ளான். பிற நாட்டுத் தொழிலாளர்கள் குறித்த டிரம்ப்பின் இனவெறி கொள்கைகளையும் இச்சிறுவன் விமர்சித்துள்ளான்.

சிறுவனின் கடிதம்
டிரம்ப் குறித்த அந்த கடிதத்தின் தலைப்புக்கு எனது 2016ம் ஆண்டு கனவு என்று தலைப்பிட்டுள்ளான் அச்சிறுவன். அந்தக் கடிதத்தில் சிறுவன் குறிப்பிட்டுள்ளதாவது: டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஆகக் கூடாது. இதுதான் எனது கனவு.

ஆசியர்கள் போய் விடுவார்கள்
அவர் ஜனாதிபதி ஆனால், ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், மெக்சிகர்கள் அவர்களது நாட்டுக்குப் போய் விட வேண்டிய நிலை வரும். அவர்கள் போய் விட்டால் அமெரிக்காவின் மக்கள் தொகை 1,20,000 குறைந்து போய் விடும்.

இந்தியர்கள் போய் விட்டால்
இப்போது பெரும்பாலான என்ஜீனியர்கள் இந்தியர்களாக உள்ளனர். அவர்கள் போய் விட்டால் தொழில்நுட்பம் போய் விடும். டெக்னாலஜி இல்லாவிட்டால்
நெட்பிளிக்ஸ் இருக்காது. நெட் பிளிக்ஸ் இல்லாவிட்டால் பொழுது போகாது.

இப்படிப்பட்ட நிலை தேவையா
இப்படிப்பட்ட உலகம் எனக்கு வேண்டாம். எனவே டிரம்ப் ஜனாதிபதி ஆகக் கூடாது என்பதே எனது கனவு என்று கூறியுள்ளான் அந்த சிறுவன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications