ஜனநாயகத்தை வலியுறுத்தி ஹாங்காங்கில் லட்சக்கணக்கானோர் பிரம்மாண்ட பேரணி!
ஹாங்காங்: சீனாவின் ஆளுகையில் கீழ் இருக்கும் ஹாங்காங்கில் கூடுதல் ஜனநாயகத்தை வலியுறுத்தி லட்சக்கணக்கானோர் இன்று பிரம்மாண்ட பேரணியை நடத்தினர்.
இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு ஜூலை 1-ந் தேதியன்று சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. "ஒரே நாடு இரண்டு நிர்வாகங்கள்" என்ற கோட்பாட்டுடன் சீனாவின் ஒருபகுதியானது ஹாங்காங்.
ஆனால் இதை ஹாங்காங் மக்கள் முழுமையாக இன்னமும் ஏற்கவில்லை. ஆண்டுதோறும் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்ட ஜூலை 1-ந் தேதியன்று பல லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தங்களது சுதந்திர தாகத்தை வெளிப்படுத்துவது வழக்கம்.

2 லட்சம் பேர் பேரணி
கடந்த 10 ஆண்டுகளை விட இந்த முறை சுமார் 2 லட்சம் பேர் ஹாங்காங் வீதிகளில் திரண்டு ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுத்தனர். அத்துடன் நாட்டின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக யார் இருப்பது என்பதை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு தன்னிச்சையாக நடைபெற்று வருகிறது.

ஹாங்காகின் கோரிக்கை
தற்போது சீனா நாட்டைச் சேர்ந்தவர்தான் நிர்வாகியாக இருந்து வருகிறார். ஹாங்காங்கை சேர்ந்த ஒருவரே நிர்வாகியாக இருக்க வேண்டும் என்பது அந்த மக்களின் கோரிக்கை.

சீனா பிடிவாதம்
இதை சீனா தொடர்ந்தும் நிராகரித்து வருகிறது. 2017ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஹாங்காங் மக்கள் விரும்புகிற ஜனநாயக உரிமைகள் வழங்கப்படும் என்று சீனா உறுதி அளித்து வருகிறது.

அமெரிக்கா சார்பு
இந்த விவகாரத்தில் ஹாங்காங்கில் ஜனநாயகம் கோருவோர் அமெரிக்கா பக்கம் சாய்ந்தும் வருகின்றனர். இதனால் சீனா அரசு அதிருப்தியில் இருந்து வருகிறது.

கிலியில் சீனா
இந்நிலையில் ஜனநாயகம் கோரி லட்சக்கணக்கானோர் ஹாங்காங் வீதிகளில் ஒன்று திரண்டிருப்பது சீனாவை கிலி கொள்ள வைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications