நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் உருத்திரகுமாரன் தேர்வு!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2-ம் தவணைக்கான முதல் அரசவைக் கூட்டம் கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதிவரை அமெரிக்காவின் நியூஜெர்சி மற்றும் சுவிஸின் ஜூரிச்சில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உருத்திரகுமார் மீண்டும் பிரதமராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்வில் பேசிய உருத்திரகுமாரன், 2002ம் ஆண்டு தமிழ் தேசிய இனத்தின் உணர்ச்சியின் பிரதிபலிப்பான, எழுச்சியின் வடிவமா,ன தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களின் போராடும் ஆற்றலினைவும், பேரம்பேசும் திறத்தினையும், மக்களையும் தேசத்தினையும் நிர்வகிக்கும் தகமை எனும் தலைமையினையும், அனைத்துலகிற்கு எடுத்தியம்பி, அதனடிப்படையில் அனைத்துலகத்தின் அனுசரணையுடன் சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது.
அந்தவேளையிலே தேசியத் தலைவரது நம்பிக்கைக்கு ஒருவனாக அதில் பணியாற்றும் பேறு எனக்கு கிடைத்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை அந்த செயற்பாட்டின் ஒர் தொடர்சியாகவே நான் பார்க்கின்றேன். அந்தப் பணி முடியும் வரை அந்த இலட்சியம் அடையும் ஓயப்போவதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications