5 லட்சம் இந்தியர்களை வெளியே அனுப்பும் அமெரிக்கா.. கிரீன் கார்ட் கிடையாது.. பகீர் கிளப்பும் டிரம்ப்
அமெரிக்காவில் எச்-1பி விசா காலக்கெடு முடிவடைந்து கிரீன் கார்டிற்காக காத்து இருக்கும் பணியாளர்கள் இனி அந்த நாட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
Recommended Video

நியூயார்க்: எச்-1பி விசா காலக்கெடு முடிந்தும் அமெரிக்காவில் பல வெளிநாட்டு பணியாளர்கள் தங்கி இருக்கிறார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த பணியாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக எச்-1பி விசா பெறுவதில் நிறைய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது. சில சில விதிமுறை மாற்றங்களும் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் தற்போது எச்-1பி விசா காலக்கெடு முடிந்து அமெரிக்காவில் கிரீன் கார்ட் வாங்குவதற்காக காத்து இருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட இருக்கிறது.

எச்-1பி விசா
எச்-1பி விசா வைத்து இருப்பவர்களுக்கு வழக்கமான காலக்கெடுவைவிட 3 வருடம் அதிகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் 6 வருடம் அங்கு இருக்க முடியும். அமெரிக்காவில் இருக்கும் 'திறன்வாய்ந்த' பணியாளர் பற்றாக்குறையை போக்குவதற்காக இந்த காலக்கெடு நீட்டிப்பு ஒபாமா ஆட்சியில் இருந்த போது செய்யப்பட்டது.

குடியுரிமை
இப்படி காலகெடு நீட்டிப்பு செய்யப்படும் சமயங்களில் அங்கு எச்-1பி விசா வைத்து இருக்கும் இந்தியர்கள் கிரீன் கார்ட் கேட்டு விண்ணப்பம் செய்வது வழக்கம். இவர்களின் கிரீன் கார்ட் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு முடிவு தெரியும் வரை அவர்கள் அமெரிக்காவிலேயே தங்கி கொள்ளும் சட்டம் தற்போது நடைமுறையில் இருக்கிறது. சத்யா நாடெல்லா தொடங்கி சுந்தர் பிச்சை வரை இப்படித்தான் கிரீன் கார்ட் பெற்றார்கள்.

இனி கிடையாது
இனி இதுபோல் அமெரிக்காவில் தங்கி இருக்க முடியாது. அதன்படி ஒருவருடைய எச்-1பி விசா காலாவதியாகிவிட்டால் அவர் கண்டிப்பாக அமெரிக்காவை விட்டு செல்ல வேண்டும். கிரீன் கார்ட் விண்ணப்பம் நிலுவையில் இருந்தாலும் இதே கதிதான். இதனால் அங்கு இருக்கும் பல வெளிநாட்டு பணியாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

வேலை போக வாய்ப்பு
இந்த புதிய சட்டம் திருத்தம் காரணமாக 5 லட்சம் இந்திய பணியாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. இதில் பலருக்கு வேலை போகும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. மேலும் தற்போது அங்கு எச்-1பி விசா காலக்கெடு முடிந்து இருக்கும் பணியாளர்கள் பலர் இன்னும் சில தினங்களில் ஊருக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.
-
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications