அமெரிக்க புயலை விட அதை சொன்ன இந்த டிவி நியூசால்தான் ரொம்ப பயந்து வருது!
Recommended Video
வாஷிங்டன்: அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்ததால் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் எச்சரித்ததை தொடர்ந்து, 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கியது. கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசியது. ஆக்ரோஷமாக எழுந்த கடல் அலைகள், கரையோர பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.
THIS has got to be the scariest #WeatherReport ever 😳😳😳#Florence #ChromaKey #Technology#TVReports #HurricaneFlorence pic.twitter.com/KLFAlCY8pa
— T R B Rajaa (@TRBRajaa) September 14, 2018
இப்படி கடல் நீர் அல்லது ஆற்று நீர் எப்படி குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் என்பதை எச்சரிக்கை செய்து டிவி சேனல் ஒளிபரப்பிய ஒரு செய்தியை பார்த்தாலே பயப்படும் அளவுக்கு உள்ளது. ஆம், அதிகபட்சம் 9 அடி வரை வெள்ளம் சூழும் என்று எச்சரிக்கிறார் செய்தி வாசிப்பாளர். இதுபற்றிய கிராபிக்சும் உருவாக்கப்பட்டு டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
இதை பாருங்கள் உங்களுக்கும் அமெரிக்க புயலின் ஆவேசம் எப்படிப்பட்டது என்பது தெரியும்.