விளாடிமிர் புடினை கவிழ்க்க சதி! நாங்க இல்லை ரஷ்ய அதிகாரிகளே பண்றாங்க! பரபரப்பை கிளப்பும் உக்ரைன்..!
கீவ் : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வீழ்த்த சதி நடப்பதாகவும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உக்ரைன் மீதான போரில் முக்கியமான திருப்புமுனை ஏற்படும் எனவும் உக்ரைன் நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியுள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நெருங்கியுள்ள நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்த வதந்திகள் பரப்பப்பட்டு வருவது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் அவரது காதலிக்கு குழந்தை பிறந்துள்ளதாக பல்வேறு மாறுபட்ட தகவல்கள் உலா வருகின்றன.

அதிபர் விளாடிமிர் புடின்
ஒருபுறம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் அவரது காதலிக்கு குழந்தை பிறந்ததாகவும் இருவேறு மாறுபட்ட தகவல்கள் உலா வருகின்றன. மிகக் கடுமையான நோய் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் அவர் ஆட்சிப்பொறுப்பை தனது நெருங்கிய நண்பரும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான நிகோலாய் பட்ருஷேவிடம் தற்காலிகமாக அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் அடிக்கடி செய்தி வெளியிட்டு வருகின்றன.

ரஷ்யாவில் ஆட்சி மாற்றம்
அதே நேரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அல்லது ரஷ்ய ஊடகங்களும் இது குறித்து உறுதியான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. இதனால் யூகங்களுக்கு வலு சேர்ந்து வரும் அதே நேரத்தில் புற்றுநோய் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விளாடிமிர் புடின் பொதுக்கூட்டங்களில் உரையாடும்போது அவரது உடல்மொழி வழக்கத்திற்கு மாறாக இருப்பதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் மேற்கொள்ளவிருக்கும் அறுவை சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகள் அவரை குறுகிய காலத்திற்கு செயல்பட முடியாமல் செய்யும் எனவும் கூறுகிறது.

புடினுக்கு எதிராக சதி
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல சதி நடப்பதாகவும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உக்ரைன் மீதான போரில் முக்கியமான திருப்புமுனை ஏற்படும் எனவும் உக்ரைன் நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியுள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ஸ்கை நியூஸிடம் பேசுகையில், "உக்ரைனில் நடக்கும் போரில் ரஷ்யா தோல்வியுற்றால், புடின் அகற்றப்படுவார் மற்றும் அவரது நாடு வீழ்ச்சியடையும்" என்று கூறினார்.
Recommended Video

ஏற்கனவே ஆட்சிக்கவிழ்ப்பு
புடினை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என்ற அவரிடம் ஏற்கனவே ஆட்சிக்கவிழ்ப்பு நடந்ததாக நம்புகிறீர்களா என்று கேட்ட போது, "ஆம்" என்று பதிலளித்ததோடு, அதிபர் புடினை வீழ்த்துவதை தடுக்க இயலாது" என்று கூறினார். ரஷ்யாவின் ஃபெடரல் ப்ரொடெக்டிவ் சர்வீஸ் , மாற்றும் முக்கிய உளவு நிறுவனமான FSB மற்றும் ரோஸ்க்வார்டியா ஆகியவை புடினைப் பாதுகாக்க உதவுகின்றன எனவும் கூறினார். மேலும் புடின் மிகவும் மோசமான உளவியல் மற்றும் உடல் பாதிப்புடன் இருக்கிறார் என்பதையும், அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்த முடியும் என்றும் புடானோவ் கூறினார்.












Click it and Unblock the Notifications