200 தமிழ் அகதிகளை இலங்கையிடமே ஒப்படைக்கும் ஆஸி.. ஐ.நா. கண்டனம்

இது மிகவும் கவலை தரும் விஷயம் என்றும் அது வர்ணித்துள்ளது.
சமீபத்தில் புகலிடம் தேடி 2 படகுகளில் 200 தமிழர்கள் இலங்கையிலிருந்து உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியா வந்தபோது அவர்களை வழிமறித்த ஆஸ்திரேலியா எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவர்களை இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அனேகமாக இன்று அவர்கள் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர்களை நடுக்க கடலில் வைத்து இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கவும் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் இந்த செயலுக்கு உலகத் தமிழரக்ள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அதேபோல ஐ.நாவும் இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ளது.
இலங்கைப் படையினரிடம் சிக்கி பாலியல் பலாத்காரம், அடி உதை, சித்திரவதை என்று கஷ்டப்பட்டு வந்த தமிழர்கள்தான் அவர்களின் பிடியிலிருந்து தப்புவதற்காக இப்படி ஆஸ்திரேலியா வருகின்றனர். ஆனால் அவர்களை மீண்டும் இலங்கைப் படையினரிடமே ஒப்படைப்பது என்பது அநியாயமானது என்று தமிழர்கள் கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் செயல் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறுகையில், இதுவரை எந்த ஒரு உறுதியான செய்தியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அப்படி நடந்தால் அது மிகவும் கவலைக்குரியதாகும்.
சர்வதேச சட்டங்களின்படி எந்த ஒரு புகலிடம் தேடி வருபவரையும் கட்டாயப்படுத்தி அவர்களது நாட்டுக்கே அனுப்ப முடியாது, அனுப்பவும் கூடாது. இதை ஆஸ்திரேலியா உணர வேண்டும் என்றனர்.
கடந்த ஆண்டில் முதல் 7 மாதங்களில் மட்டும் 220 படகுகள் மூலம் 16,000 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக ஆஸ்திரேலியா போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications