200 தமிழ் அகதிகளை இலங்கையிடமே ஒப்படைக்கும் ஆஸி.. ஐ.நா. கண்டனம்

இது மிகவும் கவலை தரும் விஷயம் என்றும் அது வர்ணித்துள்ளது.
சமீபத்தில் புகலிடம் தேடி 2 படகுகளில் 200 தமிழர்கள் இலங்கையிலிருந்து உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியா வந்தபோது அவர்களை வழிமறித்த ஆஸ்திரேலியா எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவர்களை இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அனேகமாக இன்று அவர்கள் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர்களை நடுக்க கடலில் வைத்து இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கவும் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் இந்த செயலுக்கு உலகத் தமிழரக்ள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அதேபோல ஐ.நாவும் இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ளது.
இலங்கைப் படையினரிடம் சிக்கி பாலியல் பலாத்காரம், அடி உதை, சித்திரவதை என்று கஷ்டப்பட்டு வந்த தமிழர்கள்தான் அவர்களின் பிடியிலிருந்து தப்புவதற்காக இப்படி ஆஸ்திரேலியா வருகின்றனர். ஆனால் அவர்களை மீண்டும் இலங்கைப் படையினரிடமே ஒப்படைப்பது என்பது அநியாயமானது என்று தமிழர்கள் கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் செயல் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறுகையில், இதுவரை எந்த ஒரு உறுதியான செய்தியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அப்படி நடந்தால் அது மிகவும் கவலைக்குரியதாகும்.
சர்வதேச சட்டங்களின்படி எந்த ஒரு புகலிடம் தேடி வருபவரையும் கட்டாயப்படுத்தி அவர்களது நாட்டுக்கே அனுப்ப முடியாது, அனுப்பவும் கூடாது. இதை ஆஸ்திரேலியா உணர வேண்டும் என்றனர்.
கடந்த ஆண்டில் முதல் 7 மாதங்களில் மட்டும் 220 படகுகள் மூலம் 16,000 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக ஆஸ்திரேலியா போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications