பன்றி இறைச்சி கட்டுப்படியாகவில்லை.. பரம எதிரி அமெரிக்காவிடம் மாட்டிறைச்சிக்காக கைகோர்க்கும் சீனா
பன்றி இறைச்சி தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவுடன் மாட்டிறைச்சிக்காக கைகோர்த்துள்ளது சீனா.
பெய்ஜிங்: சீனாவின் பிரதான உணவான பன்றி இறைச்சியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் மாட்டிறைச்சி மோகம் தலைதூக்கி வருகிறது. பரம எதிரியாக கருதும் அமெரிக்காவில் இருந்து மாட்டிறைச்சியை சீனா இறக்குமதி செய்வது கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
உலகிலேயே பன்றி இறைச்சியை அதிகம் சாப்பிடும் நாடுகளில் சீனாவும் ஒன்று. சீனாவில் 50.4% பேர் பன்றி இறைச்சி சாப்பிடுகிறவர்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பன்றி இறைச்சிக்கு சீனாவில் கடும் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
என்னதான் பன்றி பண்ணைகள் பெருகிக் கொண்டே இருந்தாலும் இறைச்சி தட்டுப்பாடு தவிர்க்க முடியாமல் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருகிறது.

அமெரிக்கா மாட்டிறைச்சி
இதனால் மெல்ல மெல்ல மாட்டிறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை விஸ்வரூபமெடுத்தது. அதுவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சியை சீனர்கள் தேடித் தேடி வாங்கி சாப்பிடுகின்றனர்.

அமெரிக்கா மகிழ்ச்சி
கடந்த ஆண்டு மட்டும் 2.6 பில்லியன் டாலர் அளவுக்கு மாட்டிறைச்சியை சீனா இறக்குமதி செய்திருப்பது கண்டு அமெரிக்கா அகம் மகிழ்ந்து போனது. ஏனெனில் 14 ஆண்டுகளாக அமெரிக்காவின் மாட்டிறைச்சி இறக்குமதியை சீனா நிறுத்தி வைத்திருந்தது.

வாங்கி குவிக்கும் சீனா
நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் இறைச்சியை சீனாவுக்கு அமெரிக்கா அனுப்புகிறது என அப்போது பரபரப்பு குற்றம்சாட்டப்பட்டது. இப்போது தேவை அதிகரித்துள்ள நிலையில் சந்தடி சாக்கில் அமெரிக்காவில் இருந்து மாட்டிறைச்சியை வாங்கி குவிக்கிறது சீனா.

அமெரிக்காவுடன் கை கோர்ப்பு
இதுபோதாதா அமெரிக்காவுக்கு? இப்போது சீனாவுக்கான மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகத்தை முனைப்புடன் செயல்படுத்த மும்முரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் அமெரிக்காவில் மாட்டிறைச்சி விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்படுகிறது.

இந்தியாவும் பிற நாடுகளும்
இந்தியாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து சட்டம் போடுகிறோம்.. அமெரிக்காவும் சீனாவும் பரம எதிரிகளாக இருந்தாலும் மாட்டிறைச்சிக்காக கை கோர்க்கிறார்கள்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications