டிரம்பிடம் பணிந்த சீனா? ஹார்முஸில் அமெரிக்க கடற்படை செய்த மெகா சம்பவம்! ஜலசந்தியில் பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: "யார் தடுத்தாலும் வருவேன்!" என்று நேற்று சவால் விட்ட சீனக் கப்பல், இன்று அமெரிக்காவின் பிடிவாதத்திற்கு முன்னால் பணிந்து பின்வாங்கியிருக்கிறது. அமெரிக்கா விதித்துள்ள கடல்வழித் தடையை மீற முயன்ற 'ரிச் ஸ்டாரி' கப்பல், மீண்டும் ஜலசந்திக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. உலகத்தையே அதிர வைத்துள்ள இந்த சம்பவம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

வளைகுடாவில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கிய போர், ஒரு மாதத்திற்குப் பிறகு இப்போது தான் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இன்னுமே போர் நிரந்தரமாக முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. எப்போது வேண்டும் என்றாலும் மீண்டும் மோதல் வெடிக்கும் என்ற ஒரு பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

US Navy Blocks China Ship Rich Starry in Strait of Hormuz Tensions Rise in middle east crisis

முடக்கிய அமெரிக்கா

பாகிஸ்தான் நடந்த அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானைச் சுற்றி அமெரிக்கக் கடற்படை நிறுத்தப்படும் என்றும் எந்த கப்பலும் ஹார்முஸை கடக்க அனுமதிக்கப்படாது என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்தச் சூழலில் தான் சீன கப்பல் தொடர்பாக இப்படி இரு வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் தடையை மீறி சீன கப்பல் ஒன்று ஜலசந்தியைக் கடந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.. அமெரிக்கக் கப்பல்களைத் தாண்டி அந்த கப்பல் ஜலசந்தியை கடந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் அந்த கப்பல் ஜலசந்தியை கடக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சீனாவைச் சேர்ந்த அந்த 'ரிச் ஸ்டாரி' என்ற கப்பல் புதன்கிழமை மீண்டும் வளைகுடா பகுதிக்கே திரும்பியுள்ளது.

சீன கப்பல்

இது தொடர்பாக அமெரிக்க மத்திய கமாண்ட் (CENTCOM) தனது ட்விட்டரில், "முதல் 24 மணிநேரத்தில் ஒரு கப்பல் கூட எங்களைத் தாண்டிச் செல்லவில்லை" என்று கூறியுள்ளது. தடையை மீற முயன்ற 6 கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் ஈரான் துறைமுகங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் சீன கப்பல் ஹார்முஸை கடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

சீனாவின் ஷாங்காய் சுவான்ரன் ஷிப்பிங் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த 'ரிச் ஸ்டாரி' கப்பலில் சுமார் 2.5 லட்சம் பீப்பாய்கள் மெத்தனால் உள்ளது. இது தடையை மீற முயன்று தோற்றுப்போயுள்ளது. மற்றொரு பக்கம், 'அலிசியா' (Alicia) என்கிற பிரம்மாண்ட கச்சா எண்ணெய் கப்பல் தற்போது ஜலசந்தி வழியாக வளைகுடாவுக்குள் நுழைகிறது. இது ஈரானுக்குச் செல்லாமல், ஈராக்கில் எண்ணெய் ஏற்றுவதற்காகச் செல்கிறது என்பதால் அமெரிக்கா இதை அனுமதித்துள்ளது.

130 கப்பல்கள்

பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா - இஸ்ரேல் தரப்பு ஈரானுடன் போரைத் தொடங்கியதற்கு முன்பு வரை, இந்த ஜலசந்தி வழியாகத் தினமும் 130-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும். ஆனால், இப்போது அந்தப் பகுதி போர்க்களமாக மாறியிருப்பதால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்களே பயத்துடன் வலம் வருகின்றன. அதுவும் இப்போது அமெரிக்கா ஈரான் செல்லும் அனைத்து கப்பல்களையும் முடக்கியுள்ளதால் ஓரிரு கப்பல்களே அங்குச் செல்கிறது.

தற்போதைய நிலவரம்

சபாஹர் துறைமுகத்தைப் பொறுத்தவரை ஈரான் அருகில் உள்ள இந்தத் துறைமுகத்திலிருந்து வெளியேற முயன்ற 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் போர்க் கப்பல்கள் தடுத்து நிறுத்தியுள்ளன. ஏற்கனவே போர்ப் பதற்றம் காரணமாகக் கப்பல்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் எகிறியுள்ளது. இது உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+