செக்ஸ் பொம்மையை வெடிகுண்டு என நினைத்து பீதி: 3 மணிநேரம் கதிகலங்கிய ஜெர்மனி நகரம்
பெர்லின்: ஜெர்மனியில் செக்ஸ் பொம்மையை வெடிகுண்டு என நினைத்து அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு 3 மணிநேரம் சோதனை நடந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள ஹால்பெர்ஸ்டாட் நகரில் உள்ள விளையாட்டு பூங்காவுக்கு பலரும் சென்றுள்ளனர். அப்போது அங்கு உள்ள ஆண்கள் கழிப்பறையில் இருக்கும் குப்பைத் தொட்டியில் இருந்து ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சப்தமும், டிக் டிக் டிக் என்ற சப்தமும் வந்துள்ளது.
இந்த சப்தத்தை கேட்ட 38 வயது பெண் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். வெடிகுண்டு தான் இருக்கிறது என நினைத்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு வந்தனர். பூங்கா மற்றும் அதன் சுற்றியுள்ள கட்டிடங்களில் இருக்கும் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
3 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் யாரோ ஒருவர் வைப்ரேஷன் ஆகும் செக்ஸ் பொம்மையை பயன்படுத்திவிட்டு குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றது தெரியவந்தது.
அதன் பிறகு அப்பகுதியில் பரபரப்பு அடங்கி மக்கள் நிம்மதி அடைந்தனர்.