“வார்னிங்” - 13 வருசமாக உளவு! வாட்ஸ் அப் செயலியா.. ஸ்பையா? “டெலிட்” பண்ணுங்க - டெலிகிராம் நிறுவனர்
மாஸ்கோ: கோடிக்கணக்கான உலக மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலி ஆபத்தானது என்றும், பயனாளர்களின் தகவல்களை திருடுவதற்காகவும், மக்களை கண்காணிப்பதற்காகவுமே அது இயங்கு வருவதாகவும் டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவேல் துரோவ் எச்சரித்துள்ளார்.
பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் என கொடிகட்டிப் பறந்த சமூக வலைதளங்களுக்கு மத்தியில் சைலண்டான அறிமுகம் கொடுத்து கோடிக்கணக்கான உலக மக்களை தனது வாடிக்கையாளர்களாக மாற்றி இருக்கிறது வாட்ஸ் அப்.
வாட்ஸ் அப்புக்கு கிடைத்த கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள், வருமானம், வரவேற்பை பார்த்த பேஸ்புக் நிறுவனம், அதன் நிறுவனர்களிடம் பல கோடி ரூபாய் கொடுத்து அதை வாங்கியது. அதிலிருந்து பேஸ்புக்கின் அங்கமானது வாட்ஸ் அப்.

அப்டேடான வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்பை பேஸ்புக் வாங்கியதில் இருந்து குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, ஸ்டோரீஸ் வைக்கும் வசதி, வாட்ஸ் அப் பே என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்புக்கு போட்டியாக அதைவிட அதிக வசதிகளை உள்ளடக்கிய செயலிதான் டெலிகிராம். இதற்கும் கோடிக்கணக்கான பயனாளர்கள் இருக்கிறார்கள்.

டெலிகிராம்
சொல்லப்போனால் டெலிகிராமில் இடம்பெற்ற வசதிகளைதான் பின்னாட்களில் வாட்ஸ் அப் காப்பி செய்துவிட்டதாகக் கூட குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இன்று வரை டெலிகிராமில் இடம்பெற்று இருக்கும் சேனல் வசதி, கருத்துக்கணிப்பு வசதி போன்றவை வாட்ஸ் அப்பில் இடம்பெறவில்லை.

குற்றச்சாட்டு
கடந்த 2020 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் தனிநபர் தகவல்களை பயன்படுத்தும் வகையில் புதிய விதிகளை கொண்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக பலரும் சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கினர். ஆனால், காலப்போக்கில் மீண்டும் வாட்ஸ் அப்பிலேயே மக்கள் கரை ஒதுங்கினர்.

பாவெல் துரோவ்
இதற்கிடையே வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவில் பாதுகாப்பு குறைபாடு அண்மை கண்டுபிடிக்கப்பட்டதாக டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். "தங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் மக்கள், வாட்ஸ் அப் தளத்தில் இருந்து வெளியேற வேண்டும். வேறெந்த மெசேஜிங் செயலியை வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள். வாட்ஸ் அப் தவிர.

உளவு பார்க்கிறது
கடந்த 13 ஆண்டுகளாக வாட்ஸ் அப் ரகசிய கண்காணிப்பு கருவியாக செயல்பட்டு வருகிறது. டெலிகிராமை மக்கள் பயன்படுத்துமாறு நான் வற்புறுத்தவில்லை. உங்கள் ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் இருந்தால் அதன் மூலம் அதில் இருக்கும் உங்களின் அனைத்து விதமான டேட்டாக்களையும் அதனால் பயன்படுத்த இயலும்.

எச்சரிக்கை
வாட்ஸ் அப் செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் பயன்படுத்துவது என்பது உங்கள் ஸ்மார்ட் போனை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு நீங்களே ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பதை போன்றது." என்றார். தொடர்ந்து வாட்ஸ் அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் கடந்த 2016 ஆம் ஆண்டு பாவெல் அதிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications