ஜெர்மனி விமான விபத்து: கடைசி 8 நிமிடங்களில் பல ஆயிரம் அடி உயரத்தை இழந்த விமானம்!
பாரிஸ்: 150 பயணிகளுடன் நேற்று விபத்துக்குள்ளான லுப்தான்ஸாவின் ஜெர்மன் விங்ஸ் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் அதன் வேகத்தை பல மடங்கு இழந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகர் நோக்கி சென்ற அந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

அதில் பயணித்த 150 பேரும் பலியாகிவிட்டனர். ஆல்ப்ஸ் மலைத் தொடரில் கொட்டும் பனி காரணமாக விமானம் விழுந்த இடத்தில் ஹெலிகாப்டர்களால் தரையிறங்க முடியவில்லை. மீட்புப் படையினர் ஹெலிகாப்டர்களில் இருந்து தரையிறக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதில் விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
விபத்துக்குள்ளாகும் முன் விமான பைலட்டுகள் அபாய நிலை தொடர்பாக எந்த சிக்னலையும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பவில்லை.
ஆனால், கடைசி 8 நிமிடங்களில் விமானம் தனது உயரத்தையும் மிக வேகமாக இழந்து மலைப் பகுதியில் மோதி வெடித்துச் சிதறியுள்ளது. விமானத்தின் பறக்கும் உயரம் மிகவும் குறைந்ததால் ரேடார் தொடர்பை விமானம் இழந்து, அபாய சிக்னலை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

விமானத்தில் இருந்த 15 பள்ளி மாணவர்கள், 2 சிறு குழந்தைகள், 3 விமானிகள், 3 விமான சிப்பந்திகள் உள்ளிட்ட 150 பேரும் பலியாகிவிட்டனர்.
ஜெர்மனியின் லுப்தான்ஸா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தின் இந்த ஏர்பஸ் A320 ரக விமானம் மலைப் பகுதியில் மோதி வெடித்து பல பாகங்களாக சிதறிக் கிடக்கிறது.
விமானம் விபத்துக்குள்ளானபோது அது 6,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந்தப் பகுதியின் மலைத் தொடர்களின் உயரம் 2,000 முதல் 9,000 அடி வரை என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் சிதைந்த பாகங்களில் ஒன்று கூட பெரிய அளவில் இல்லை. எல்லாமே தூள் தூளாகி சிதறிக் கிடக்கிறது. இதனால் விமானம் மிக பயங்கரமான வேகத்தில் மலைப் பகுதியில் மோதி வெடித்துச் சிதறியுள்ளதாகத் தெரிகிறது.
பார்சிலோனாவில் காலை 10 மணிக்குக் கிளம்பிய விமானம் 10.53க்கு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளம்பிய சற்று நேரத்தில் 38,000 அடி உயரத்தை எட்டிய விமானம் அடுத்த சில நமிடங்களில் தொடர்ந்து தனது வேகத்தையும் உயரத்தையும் இழந்தவாரே பறந்துள்ளது. கடைசி 8 நிமிடங்களில் அந்த விமானத்தின் உயரம் 6,000 அடியாகக் குறைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டி பாரிஸ் நகரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கிடைக்கும் விவரங்களை வைத்தே விபத்துக்கான காரணம் தெரியவரும்.
இந்த விமானம் 24 ஆண்டுகள் சேவையில் இருந்து வந்துள்ளது. விமானம் மிக நல்ல நிலையிலேயே இருந்ததாக லுப்தான்ஸா தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications