உலக சாம்பியன் ஷிப் போட்டி.. ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா அசத்தல்.. வெள்ளி பதக்கம் வென்றார்
ஒரேகான்: அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா அசத்தினார். இறுதி போட்டியில் 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
Recommended Video
18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 22 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் அரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா பங்கேற்று உள்ளார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இறுதி போட்டியில் நீரஜ் சோப்ரா
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா சிறப்பாக செயல்பட்டார். தகுதி சுற்றில் தனது முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார். இதையடுத்து இன்று இறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வெல்வார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

88.13 மீட்டருக்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா
இன்றைய இறுதிபோட்டியில் நீரஜ் சோப்ரா தனக்கான முதல் வாய்ப்பில் ‛பவுல்' செய்தார். இதையடுத்து 2வது வாய்ப்பில் 82.39 மீட்டருக்கு ஈட்டி எறிந்தார். 3வது வாய்ப்பில் 86.37 மீட்டர் தொலைவுக்கும் ஈட்டியை வீசினார். இதன்மூலம் அவருக்கு பதக்க வாய்ப்பை உறுதி செய்தார். இதையடுத்து நீரஜ் சோப்ரா தனது 4 வது வாய்ப்பில் 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை வீசி 2வது இடம் பிடித்தார். 5வது மற்றும் 6வது வாய்ப்பை ‛பவுல்' செய்தார்.

வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்
5வது, 6வது வாய்ப்பை நழுவவிட்டாலும் கூட 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்ததன் மூலம் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்த போட்டியில் அவர் முதல் இடத்தை பிடித்தால் 39 ஆண்டு இந்திய வரலாற்றில் தங்கம் வென்ற முதல் வீரர் என்று சரித்திரத்தை படைத்திருப்பதார். இருப்பினும் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜூக்கு பிறகு பதக்கம் வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.

ஒலிம்பிக்கின் தங்கமகன்
முன்னதாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 32வது ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். இந்த ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications