ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் 6 மாதம் பாலியல் கொடுமை, தப்பி வந்த பெண்ணின் கண்ணீர் கதை
"ஆறு மாதங்கள் வரை தினமும் அவன் என்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தினான். தற்கொலை செய்துக் கொள்ள முயன்றேன்" என்று சொல்கிறார் குர்து இன யசிதிப் பெண் இக்லாஸ்.
தன்னைக் கடத்திச் சென்ற ஐ.எஸ் தீவிரவாதிகளின் குழுவினரிடம் ஆறு மாதங்கள் வரை பாலியல் அடிமையாக சிக்கித் தவித்திருக்கிறார் 14 வயது இக்லாஸ்.
2014 ஆம் ஆண்டில், குர்து இனத்தைச் சேர்ந்த யசீதி பிரிவினர் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய இலக்காக இருந்தார்கள். குர்து மொழி பேசுகின்ற இனச்சமயக் குழுவினரான யசீதி மக்கள், இராக்கின் வடக்குப் பகுதிகளில் பன்னெடுங்காலமாக வசிப்பவர்கள்.
இந்த இனத்தவர்களை பிடித்துச் செல்லும் இஸ்லாமிய தீவிரவாதிகள், ஆண்களை கொன்றுவிட்டு, பெண்களை கைதிகளாக பிடித்துச் செல்கின்றனர்.
ஐ.எஸ் அமைப்பு
சிஞ்சர் மலைகளுக்கு சென்றுவிட்டால், ஐ.எஸ் அமைப்பினரிடம் சிக்காமல் தப்பிக்கலாம் என்று இக்லாஸ் முயன்றிருக்கிறார். ஆனால் முயற்சி திருவினையாகும் முன்னரே அவர் பிடிபட்டார்.
பிணைக் கைதியாக இருந்தபோது, தீவிரவாதிகளில் ஒருவன், இக்லாஸை ஆறு மாதங்கள் தொடர்ந்து பாலியல் அடிமையாக வைத்திருந்தானாம்.
மொசூல் நகரெங்கும் மழலைகளின் அழுகுரல்
150 பெண்களில் இருந்து குலுக்கல் முறையில் பெண்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று ஐ.எஸ் அமைப்பினரின் அரக்கத்தனத்தை சொல்கிறார் இக்லாஸ்.
"அவன் மிகவும் அகோரமாக இருப்பான், நீண்ட தலைமுடியுடன் பார்ப்பதற்கு பெயரிட முடியாத விலங்கைப் போல் இருப்பான். உடலில் இருந்து வீசும் துர்நாற்றம் குடலைப் பிடுங்கியெடுக்கும். அவனைப் பார்த்தாலே உடல் அச்சத்தால் நடுநடுங்கும்" என்று அந்த கெட்டக் கனவை, கொடுமைகளை மீளாத்துயரை விவரிக்கிறார் இக்லாஸ்.
அகதிகள் முகாம்
கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த இக்லாஸுக்கு அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. தன்னை கொடுமைப்படுத்துபவன் சண்டைக்காக சென்றிருந்த ஒரு நாள், கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார் இக்லாஸ்.
அங்கிருந்து தப்பித்துச் சென்று, அகதிகள் முகாம் ஒன்றில் சரணடைந்தார்.
- மாணவர்களிடம் தேசப்பற்றை வளர்க்க துணைவேந்தரின் புதிய யோசனை
- இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 27 கிலோ தங்கம்
- நிதாரியில் பெண் கொலை வழக்கு: இருவருக்கு தூக்கு தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம்
சிக்கலும், துயரமும் நிரம்பிய அந்த கொடுமையான நாட்களை நினைவுபடுத்திச் சொல்லும்போதும் இக்லாஸின் உடல் நடுங்குகிறது. இந்த துயரங்களைச் சொல்லும்போது, கண்ணில் இருந்து கண்ணீர் வரவில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறதா? கண்ணீர் வற்றிப்போய், கண்களே பாலைவனமாகிவிட்டது என்று மீளாத்துயர் கொள்கிறார் இக்லாஸ்.
ஜெர்மனியில் மனநல மருத்துவமனை ஒன்றில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் இக்லாஸூக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. படித்து, பெரிய வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்புகிறார் இக்லாஸ்.
மீட்கப்பட்டது மொசூல் நகரம்: மீளுமா மக்கள் வாழ்க்கை?
பிற செய்திகள்
- ''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''
- மாய சடங்குக்குப் பிறகு சடலத்தைத் தந்த முதலை
- ஆப்கன் தலைநகர் காபூலில் தற்கொலை குண்டு தாக்குதல்: 24 பேர் பலி
- இறந்துபோன மகனின் இதயம் நேரில் வாழ்த்த திருமணம் செய்துகொண்ட தாய்
- மகளிர் உலக கோப்பை: இந்தியா கோட்டைவிட்டது ஏன்? 5 முக்கிய காரணங்கள்
- இலங்கை: கடலில் மூழ்கிய யானைகள் கடற்படையினரால் மீட்பு
- டயானாவுடனான கடைசி உரையாடலை நினைத்து வருந்தும் வில்லியம், ஹாரி
மொசூல்: மோசமான போரின் பிபிசி சாட்சியம்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!















Click it and Unblock the Notifications