பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து.. 35 பயணிகளை பலிகொண்ட கோர விபத்து! ஈஸ்டர் விடுமுறையில் சோகம்
ஹராரே : ஜிம்பாப்வே நாட்டில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஈஸ்டர் புனித யாத்திரை மேற்கொண்ட 35 பக்தர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தென்னாப்பிரிக்க நாடுகளில் பேருந்து விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மக்கள் போக்குவரத்தை கையாளும் சில ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி, வேக வரம்பை மீறுகின்றனர் என புகார்களும் கூறப்படுகிறது.
குறிப்பாக ஜிம்பாப்வேயில் நடக்கும் விபத்துகளுக்கு சாலைகளின் மோசமான நிலை தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே விபத்து
ஜிம்பாப்வேயின் சாலைகள் ஈஸ்டர் காலத்தில் மிகவும் பிஸியாக இருக்கும், பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் வாழும் இந்த நாட்டில் தற்போது விடுமுறைக் காலம் ஆகும். இது எடுத்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஏராளமான மக்கள் மலைப்பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

பக்தர்கள் பலி
இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 35 ஈஸ்டர் பண்டிகைக்காக பயணம் மேற்கொண்ட பக்தர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வேயின் கிழக்குப் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் கிறிஸ்துவ புனிதப் பயணிகளை ஏற்றி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

பள்ளத்தில் கவிழ்ந்தது
பேருந்தின் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக 106 பயணிகளுடன் அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தது என்றும் கூறப்படுகிறது. மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையிலிருந்து நிலைதடுமாறி மிக ஆழமான பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் 35 பயணிகள் உயிரிழந்தனா்.

மீட்பு பணிகள் தீவிரம்
மோசமான சாலைகளைக் கொண்டுள்ள ஜிம்பாப்வேயில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓட்டுநா்கள் அதிவேகமாக பேருந்துகளைச் செலுத்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications