For Daily Alerts
Just In
தந்த வேட்டைக்காக கொடூரம்!! ஜிம்பாப்வேயில் 80 யானைகள் கொலை!!
ஜிம்பாப்வேயின் வாங்கே தேசிய பூங்காவில் 80 ஆயிரம் யானைகள் இருக்கின்றன. இது மிகப் பெரிய வனவிலங்கு சரணாலயம். இந்த சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக யானைகள் இறந்து கிடந்ததும் அவற்றின் தந்ததங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதும் அண்மையில் தெரியவந்தது.
யானைகள் தாகம் தீர்க்க வரும் குட்டைகளில் சயனைடு விஷத்தைக் கலந்து கொலை செய்திருக்கின்றனர். இது வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜிம்பாப்வே சுற்றுச்சூழல் துறை அமைச்சர், வேட்டை கும்பலுக்கு 9 ஆண்டு சிறை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டும், அவர்களை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என்றார்.
Comments
English summary
Zimbabwean ivory poachers have killed more than 80 elephants by poisoning water holes with cyanide, endangering one of the world's biggest herds, a minister said.
Story first published: Saturday, September 28, 2013, 12:20 [IST]