பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
சென்னை விமானநிலையத்திலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற போது சிறுநல்லூர் என்ற இடத்தில் காரின் டயர் வெடித்தது.

இதில், நிலை தடுமாறிய கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது, 12 வயது குழந்தை உட்பட 4 பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications