Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பேத்கர் சிலைக்கு ‘காவி' துண்டு! சர்ச்சையை தூண்டி விட்ட சமூக விரோதிகள்! வீறு கொண்டெழுந்த விசிக!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் மின்சார வாரிய அலுவலகத்தின் முன்புள்ள அம்பேத்கார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended Video

    அம்பேத்கர் சிலைக்கு ‘காவி துண்டு! சர்ச்சையை தூண்டி விட்ட சமூக விரோதிகள்!

    காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்தின் வாயில் முன்பு உள்ள இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி அளித்த அண்ணன் அம்பேத்கர் சிலை உள்ளது.

    அம்பேத்கர் சிலை

    அம்பேத்கர் சிலை

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து விட்டு சென்றுள்ளனர். அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது.

    காவித் துண்டு

    காவித் துண்டு

    இந்த தகவலை அறிந்து ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மின்சார வாரிய அலுவலகம் முன்பு குவிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தகவலறிந்து காஞ்சிபுரம் கோட்ட டி.எஸ்.பி ஜூலியர் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    விசிக போராட்டம்

    விசிக போராட்டம்

    காவி உடை போர்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்த நிலையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் மின்சார வாரிய அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரும் பரபரப்பு

    பெரும் பரபரப்பு

    இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து விடுதலை சிறுத்தைக் கட்சியினர் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.. இதனால் ஏதேனும் அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும் ஏராளமான போலீசாரும் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவித்துண்டு அணிவித்தவர்கள் யார் என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+