இரண்டாவது முறையாக எம்பியான வழக்கறிஞர்! காஞ்சிபுரத்தின் "செல்வம்"! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வென்ற ஜி. செல்வம் யார் என தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்துமுடிந்து நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள்தான் வென்றனர். புதுவையில் உள்ள ஒரு சீட்டையும் அவர்கள் பெற்றனர்.

lok sabha election results 2024 kancheepuram

இந்த நிலையில் காஞ்சிபுரம் தொகுதியில் சிட்டிங் எம்பியான ஜி.செல்வம் திமுக சார்பில் போட்டியிட்டார். ராஜசேகர் (அஇஅதிமுக), வி. ஜோதி (பாமக), வி.சந்தோஷ்குமார் (நாம் தமிழர்) உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 5,86,044 ஆகும். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 3,64,571 வாக்குகளுடன் தோல்வி அடைந்தார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 2,21,473 வாக்குகள் ஆகும். பாமக வேட்பாளர் ஜோதி 1,64,931வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.

இரண்டாவது முறையாக எம்பியாகியுள்ள ஜி.செல்வம் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். இவர் விவசாயி, வழக்கறிஞர், அரசியல்வாதி. பச்சையப்பா கல்லூரியில் மாஸ்டர் டிகிரி படித்தார். பிறகு அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்துள்ளார். இவருடைய மனைவி பெயர் ஷகிலா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

திமுக சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு கு.செல்வம் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் போட்டியிட்ட அவர் 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது 3ஆவது முறையாக அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சியின் ஆதரவுடன் களம் இறங்கியுள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை என சொல்லப்பட்ட நிலையிலும் இவர் வென்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+