அவரை பற்றி என்கிட்ட ஏன் கேக்குறீங்க.. அங்க போய் கேளுங்க.. பிரஸ் மீட்டில் ஆவேசம் அடைந்த அண்ணாமலை!
கன்னியாகுமரி: தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு ரூ.1,368 கோடி நிதி வழங்கிய லாட்டரி மார்ட்டின் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்வியால் ஆவேசம் அடைந்தார் அண்ணாமலை. “இந்தக் கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்” என கோபமாகப் பேசியுள்ளார் அண்ணாமலை.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திர நிதி விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் இரவு தமது இணையதளத்தில் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகம் நிதி பெற்ற கட்சியாக இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சி. பாஜக, 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெற்றுள்ளது.

வேதாந்தா, மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாக நிதி அளித்துள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக லாட்டரி மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் அதிக நன்கொடை கொடுத்துள்ளது. மொத்தமாக அந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வழங்கியுள்ளது.
எனினும், லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு அல்லது கட்சிகளுக்கு அதிகளவு நிதியை வழங்கியுள்ளது என்பது தெரியவரவில்லை. தேர்தல் பத்திர எண்கள் இன்னும் வெளியிடப்படாததால் எந்த அரசியல் கட்சிக்கு யார் பணம் கொடுத்தது எனத் தெரியவில்லை.
எனினும், லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் நன்கொடை அளித்த சமயத்தில், அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்ததால், பாஜகவுக்கு தான் அவர் நிதி கொடுத்திருக்கக்கூடும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதேபோல பல்வேறு பெரு நிறுவனங்களுக்கு விசாரணை அமைப்புகள் மூலமாக ரெய்டு விட்டு, பாஜக நன்கொடை பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன,
இந்நிலையில், கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் விமான நிலையத்தில், லாட்டரி மார்ட்டின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்துள்ள விவகாரம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
ஒரு மாநிலத்தில் மட்டும் ஆளும் திமுகவுக்கு எப்படி இவ்வளவு நிதி? அதை நோண்டுங்க.. அண்ணாமலை ஆவேசம்!
இந்தக் கேள்வியால் டென்ஷன் ஆன அண்ணாமலை, “இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேக்குறீங்க? இதை நீங்கள் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனிடம் கேட்க வேண்டும். எதற்கு திருமாவளவன் ஆதவ் ஆர்ஜுனை ரைட் ஹேண்டாக வைத்திருக்கிறார்? எதற்காக ஆதவ் அர்ஜுன் அண்ணா அறிவாலயத்தில் சுத்திட்டு இருக்காரு? எதுக்கு ஆதவ் அர்ஜுன் முதல்வர் ஸ்டாலினின் சோஷியல் மீடியா அட்வைசரா இருக்காரு?
எதற்காக ஆதவ் அர்ஜுனுக்கு பொதுத்தொகுதி வேண்டும் என திருமாவளவன் தலைகீழா நின்னார்?ஆகவே, மார்ட்டின் சம்பந்தப்பட்ட எந்த கேள்வியாக இருந்தாலும், அதை ஆதவ் அர்ஜுனிடம் போய் கேளுங்க. என்கிட்ட ஏன் கேக்குறீங்க? நான் என்ன ஆதவ் அர்ஜுனா? ஆதவ் அர்ஜுன் விசிகவில் இருக்கிறார். விசிகவுக்கு போவதற்கு முன்பு திமுகவுக்கு வேலை பார்த்தார். அந்த நிறுவனத்தில் நான் இல்லை.. என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என ஆவேசமாக பதில் அளித்துள்ளார் அண்ணாமலை.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
இன்றே கடைசி.. கடையை மூடும் தேர்தல் ஆணையம்! 2026ல் ஓட்டுப் போட முடியாது? என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications