Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவரை பற்றி என்கிட்ட ஏன் கேக்குறீங்க.. அங்க போய் கேளுங்க.. பிரஸ் மீட்டில் ஆவேசம் அடைந்த அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு ரூ.1,368 கோடி நிதி வழங்கிய லாட்டரி மார்ட்டின் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்வியால் ஆவேசம் அடைந்தார் அண்ணாமலை. “இந்தக் கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்” என கோபமாகப் பேசியுள்ளார் அண்ணாமலை.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திர நிதி விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் இரவு தமது இணையதளத்தில் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகம் நிதி பெற்ற கட்சியாக இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சி. பாஜக, 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெற்றுள்ளது.

Annamalai angry on reporter in press meet for the question about lottery martin election donation

வேதாந்தா, மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாக நிதி அளித்துள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக லாட்டரி மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் அதிக நன்கொடை கொடுத்துள்ளது. மொத்தமாக அந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வழங்கியுள்ளது.

எனினும், லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு அல்லது கட்சிகளுக்கு அதிகளவு நிதியை வழங்கியுள்ளது என்பது தெரியவரவில்லை. தேர்தல் பத்திர எண்கள் இன்னும் வெளியிடப்படாததால் எந்த அரசியல் கட்சிக்கு யார் பணம் கொடுத்தது எனத் தெரியவில்லை.

எனினும், லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் நன்கொடை அளித்த சமயத்தில், அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்ததால், பாஜகவுக்கு தான் அவர் நிதி கொடுத்திருக்கக்கூடும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதேபோல பல்வேறு பெரு நிறுவனங்களுக்கு விசாரணை அமைப்புகள் மூலமாக ரெய்டு விட்டு, பாஜக நன்கொடை பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன,

இந்நிலையில், கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் விமான நிலையத்தில், லாட்டரி மார்ட்டின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்துள்ள விவகாரம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஒரு மாநிலத்தில் மட்டும் ஆளும் திமுகவுக்கு எப்படி இவ்வளவு நிதி? அதை நோண்டுங்க.. அண்ணாமலை ஆவேசம்!


இந்தக் கேள்வியால் டென்ஷன் ஆன அண்ணாமலை, “இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேக்குறீங்க? இதை நீங்கள் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனிடம் கேட்க வேண்டும். எதற்கு திருமாவளவன் ஆதவ் ஆர்ஜுனை ரைட் ஹேண்டாக வைத்திருக்கிறார்? எதற்காக ஆதவ் அர்ஜுன் அண்ணா அறிவாலயத்தில் சுத்திட்டு இருக்காரு? எதுக்கு ஆதவ் அர்ஜுன் முதல்வர் ஸ்டாலினின் சோஷியல் மீடியா அட்வைசரா இருக்காரு?

எதற்காக ஆதவ் அர்ஜுனுக்கு பொதுத்தொகுதி வேண்டும் என திருமாவளவன் தலைகீழா நின்னார்?ஆகவே, மார்ட்டின் சம்பந்தப்பட்ட எந்த கேள்வியாக இருந்தாலும், அதை ஆதவ் அர்ஜுனிடம் போய் கேளுங்க. என்கிட்ட ஏன் கேக்குறீங்க? நான் என்ன ஆதவ் அர்ஜுனா? ஆதவ் அர்ஜுன் விசிகவில் இருக்கிறார். விசிகவுக்கு போவதற்கு முன்பு திமுகவுக்கு வேலை பார்த்தார். அந்த நிறுவனத்தில் நான் இல்லை.. என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என ஆவேசமாக பதில் அளித்துள்ளார் அண்ணாமலை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+