கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் ஸ்ரீதர் முக்கிய அறிவிப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவில் மார்கழி தேர்திருவிழாவையொட்டி விடுமுறை வழங்கி கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாதம் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த விழாவுக்கு கன்னியாகுமரி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் செல்வார்கள்.
இந்நிலையில் தான் சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவில் மார்கழி திருவிழாவின் முக்கிய நளான தேர்த்திருவிழாவை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய்க்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.

26.12.2023 அன்று விடப்படும் உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 3வது சனிக்கிழமை (20.01.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
இருப்பினும் 26.12.2023ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொரட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்'' என கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்ள்ளது.












Click it and Unblock the Notifications