3 அடி நீளம்.. 2 அடி உயரம்.. மாலை அல்ல! காலணியை காணிக்கையாக வழங்கும் கிராம மக்கள்.. விசித்திர வழிபாடு
கரூர்: தான்தோன்றி மலையில் வீற்றிருக்கும் பெருமாளுக்கு பக்தர்கள் காலணியை காணிக்கையாக செலுத்தியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காலம் காலமாக பக்தர்கள் தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம். சிலர் பணமாகவும், சிலர் பொருளாகவும் செலுத்துகிறார்கள். திருப்பதி போன்ற கோயில்களில் முடி காணிக்கையாக செலுத்தப்படுகிறது.
ஆனால் இவ்வாறு காலணிகளை காணிக்கையாக செலுத்துவது தனிச்சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கோயில்
கரூர் மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் செல்லும் பாதையில் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது தான்தோன்றி மலை. இந்த மலையில் உள்ள பாறை குடையப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள குடைவரைக்கோயிலில் பெருமாள் வீற்றிருக்கிறார். இந்த மாதிரியான அமைப்பு கொண்ட குடைவரை கோயில்கள் தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் மட்டும்தான் உள்ளன. அதாவது இந்த கோயிலின் வடிவமைப்பு மூன்று கோயிலுடன்தான் ஒத்துப்போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

திருவிழா
கி.பி 13-14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில் பெருமாள் மேற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இங்கு தாயாருக்கு என தனி சன்னிதி கிடையாது. இக்கோயிலில் புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்த மறுநாள் கொடியேற்றப்பட்டு புரட்டாசி மாத பிரம்மோற்சவ திருவிழா துவங்குகிறது. இதனையடுத்து 7வது நாளில் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இந்த திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பார்கள்.

காணிக்கை
குறிப்பாக சுற்று வட்டாரங்களில் உள்ள காலணி தைக்கும் தொழிலாளிகள் இதில் பெரும்பான்மையாக பங்கேற்பார்கள். இவர்களின் முன்னோர்கள் இந்த திருவிழாவில் பெருமாளுக்கு காலணி செய்து காணிக்கையாக செலுத்தி வழிப்பட்டுள்ளனர். அதாவது இவர்களின் கனவில் பெருமாள் தோன்றி தனக்கு தேவையான அளவில் காலணியை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அதன் பெயரில் முன்னோர்கள் காலணியை காணிக்கையாக செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

விநோத வழிபாடு
இதன் தொடர்ச்சியாக ஆண்டு தோறும் இம்மக்களின் கனவில் வரும் பெருமாள் காலணி கேட்பதாகவும், எனவே முன்னோர்களின் தொடர்ச்சியாக தாங்களும் காலணியை காணிக்கையாக கொடுத்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் திருவிழாவில் 3 அடி நீளம், 2 அடி உயரம் கொண்ட காலணியை இம்மக்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இந்த விநோத வழிபாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்












Click it and Unblock the Notifications