மானத்தை பற்றி கவலைப்படாத மனிதர்கள் விமர்சனங்களை மதிக்க மாட்டேன்: கரூர் கூட்டத்தில் ஸ்டாலின் விளாசல்
கரூர்: திமுக ஆட்சி பற்றிய மானத்தைப் பற்றி கவலைப்படாத மனிதர்கள் வைக்கக்கூடிய விமர்சனங்களைப் பற்றி மதிக்க விரும்பவில்லை. என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கரூர் திருமாநிலையூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பிரமாண்ட அரசு விழாவில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனைத்தொடர்ந்து புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, 80,555 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்எல்ஏ-க்கள், திமுக மூத்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுவாக ஆட்சிக்கு வந்தால் குறைந்தது 6 மாதம் துறைகளை பற்றி தெரிந்துகொள்ள தேவைப்படும். ஆனால் திமுக ஆட்சியமைத்த முதல் நாள் முதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறுகிய காலத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களுக்கு நானே மீண்டும் வந்து தொடங்கி வைப்பேன். திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது முகத்தில் தெரிகிறது. கடல் இல்லாத கரூருக்கு கடல் போல் மக்கள் இங்கு வந்திருக்கிறார்கள். கரூர் என்றால் பிரம்மாண்டம். அதற்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டு. எப்போதும் எதையும் பிரமாண்டமாக நடத்துபவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. மக்கள் பணிகளுக்கு இலக்கு வைத்து முடித்து காட்டுபவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புகளை குறுகிய காலத்தில் வழங்கியுள்ளோம்
திமுக ஆட்சியில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று மக்களின் முகங்கள் எனக்கு சொல்லுகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். இந்த முகங்கள் மூலமாக திமுக ஆட்சி மக்களை முன்றேன்றும் ஆட்சியாக அமைந்துள்ளது என்பது தெரிகிறது. மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் தான் அக்கப்போர் செய்யும் அரைவேக்காடு விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை. மானத்தைப் பற்றி கவலைப்படாத மனிதர்கள் வைக்கக்கூடிய விமர்சனங்களைப் பற்றி மதிக்க விரும்பவில்லை.
திமுக ஆட்சி பற்றி மானத்தைப் பற்றி கவலைப்படாத மனிதர்களிடம் கேட்காமல், மக்களிடம் கேளுங்கள். தூர்வாரிய பணிகள் மூலம் மஞ்சப்பை முன்னெடுப்புகள் வரை அனைத்தையும் கேளுங்கள் என்று தெரிவித்தார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications