ஓபிஎஸை இயக்குவது திமுக தான்.. அதிமுக பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் சிறந்த வாய்ப்பு.. விஜயபாஸ்கர்!
கரூர்: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை இயக்குவது திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மூலம் அதிமுகவின் பலத்தை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் எம்ஜிஆரின் 106வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கரூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்தும், 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இயக்கம். பல சோதனைகளை கடந்து 1 கோடியே 54 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட இயக்கம்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தது அதிமுக. ஒவ்வொரு முறையும் பொய் சொல்லி தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. பீனிக்ஸ் பறவை போல் மீண்டும், மீண்டும் எழுந்த இயக்கம் அதிமுக. எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு கட்சி இரண்டாக உடைந்தது. தலைவருக்குப் பிறகு ஜெயலலிதா கட்டி காத்து எஃக்கு கோட்டையாக மாற்றினார்.
அதன் பின்னர், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிநடத்திய தேர்தலில், 75 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது அதிமுகவுக்கு இருக்கிறார்கள். நம்மிடம் இருந்து துரோகிகள் போகாமல் இருந்தால், தொடர்ந்து மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்திருக்கும்.
ஈரோடு மாவட்ட இடைத்தேர்தல் மூலம் அதிமுக எவ்வளவு பெரிய இயக்கம் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சட்டமன்றத்தில் பேசும் போது, என் தந்தை கருணாநிதி பக்தன் என்று சொல்கிறார். இப்போது அவரை இயக்குவது திமுக தான். ஓபிஎஸ் மகன் நாடாளுமன்ற உறுப்பினராகின்றார். அவர் மு.க.ஸ்டாலினை பார்த்து நல்லாட்சி நடத்துகின்றார்கள் என்று சொல்லுகிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே, மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினார்கள். இதுவரை வழங்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த 5 ஆண்டுகளுக்கு பின் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை. அதற்கு முன்னோட்டமாக நாடாளுமன்ற தேர்தல் இருந்திருக்கும். ஆனால் முன்னதாகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. அதில் அதிமுகவின் பலம் நிரூபிக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications