ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் எதிர்ப்பு.. பிரக்ஸிட் வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி
லண்டன்:பிரக்ஸிட் அமல்படுத்துவது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே தரப்பு தோல்வி அடைந்தது. தெரசா மே அரசுக்கு இந்த தோல்வி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.அதே நேரத்தில், இந்திய வம்சாவளி எம்பிக்களில் பெரும்பான்மையானோர் பிரக்ஸிட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், 1973ம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது. ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தில் செயல்படும் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ளதால், பிரிட்டன் தனித்துவத்தையும், இறையாண்மையையும் இழந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது பற்றி முடிவு செய்யும் பொது வாக்கெடுப்பு, 2016ம் ஆண்டு நடைபெற்றது. அதில் பெரும்பாலானோர் பிரிட்டன் ஐரோப்பிய யூனியிலிருந்து பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர். பிரிட்டனின் இந்த வெளியேற்ற முடிவுதான் பிரக்ஸிட் என்று அழைக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை வரும் மார்ச் 29ம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான விதிகளை வகுக்கவில்லை என கூறப்படுகிறது.இது குறித்து எம்.பி.க்களுக்கு அறிவுறுத்திய பிரதமர் தெரசா மே, பிரக்ஸிட்டை அமல்படுத்த தேவையான விதிகளை விரைந்து வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தோல்வி அடைந்தால், அது மன்னிக்க முடியாத நம்பிக்கை மீறல் என்றும் தெரசா மே கூறி இருந்தார்.இந்நிலையில், பிரக்ஸிட் மீதான பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 432 பேர் பிரக்ஸிட்டுக்கு எதிராகவும் 202 பேர் பிரக்ஸிட்டுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
இந்த வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே தரப்பு தோல்வி அடைந்தது. பிரிட்டன் வெளியேற்றத்துக்கான கெடு முடிய இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில் தெரசா மே அரசுக்கு இந்த தோல்வி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வாக்கெடுப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெரும்பான்மையான எம்பிக்கள் பிரக்ஸிட் ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
தொழிலாளர் கட்சியில் உள்ள 7 எம்பிக்களும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் உள்ள பிரக்ஸிட் ஒப்பந்துக்கு எதிராக ஓட்டு போட்டுள்ளனர். ஆதரவாக அலோக் சர்மா என்பவரும், இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகனும், அமைச்சருமான ரிஷி சுனக் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லிசா நந்தி, சீமா மல்ஹோத்ரா, தன்மன்ஜீத் சிங் தேசி, ப்ரீத்கவுர் கில் மற்றும் வலேரியா வாஸ் ஆகியோரும் பிரக்ஸிட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications