10 நாட்களுக்கு பின் ராணி எலிசபெத் இறுதிசடங்கு.. 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி!
லண்டன்: ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் 10 நாட்களுக்கு பின் நடைபெறுகிறது என்று பக்கிங்ஹாம் அரண்மனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் நீண்டகால ராணியான இரண்டாம் எலிசபெத் 96 வயதில் காலமானார். ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் கூடினர்.
1952ல் அரியணைக்கு வந்த ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மகாராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உயிரிழந்துள்ள நிலையில், இறுதிசடங்கு குறித்த திட்டங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளன.

ராணி எலிசபெத்
இதனை பிரிட்டன் அதிகாரிகள் ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்று குறிப்பிட்டு வருகின்றனர். ராணி எலிசபெத் உயிரிழப்பு காரணமாக, பிரிட்டனில் அடுத்து வரும் நாட்களில் துக்கம் அனுசரிக்கப்படும். முதலில் பிரிட்டன் கவுன்சிலின் உறுப்பினர்கள் சார்லஸை புதிய அரசராக அறிவிப்பார்கள். செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை மற்றும் ராயல் எக்ஸ்சேஞ்சில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்தில் எம்பி-க்கள் ராணி எலிசபெத்திற்கு சில நிமிடங்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

5 நாட்கள் பொதுமக்களுக்கு அனுமதி
இதனைத்தொடர்ந்து ராணி எலிசபெத்தின் உடல் அரசு ரயில் அல்லது ராயல் ஏர்ஃபோர்ஸ் மூலம் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்படும். மூன்றாவது நாளிற்கு பின் ராணியின் உடல் வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் 5 நாட்கள் வைக்கப்பட உள்ளது. அங்கு ஒவ்வொரு நாளும் மக்கள் அஞ்சலி செலுத்த 23 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ள சார்லஸ் ஸ்காட்லாந்து, அயர்லாந்து, வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தலைவர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிசடங்கு
இதனைத்தொடர்ந்து ராணி எலிசபெத்திற்கான இறுதி சடங்கு ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டும் எனவும், 10ம் நாளில் இறுதி சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிசடங்கின் போது, ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படும்.

அடக்கம்
இதன்பின்னர் வின்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இளவரசர் பிலிப் அருகே ராணி எலிசபெத் அடக்கம் செய்யப்படுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications