வங்கி கடன் மோசடி வழக்கு.. 4-வது முறையாக லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நீரவ் ஜாமின் மனு
லண்டன்: பிரபல இந்திய தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடியின் ஜாமின் மனுவை, லண்டன் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
வங்கி கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடியின் ஜாமின் மனு, தொடர்ந்து 4-வது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரி 48 வயதான நீரவ் மோடி.

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தார். இதனை முறையாக திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வந்த நீரவ், ஒரு கட்டத்தில் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார்.
இதனையடுத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மோசடி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்தியாவில் உள்ள நீரவ் மோடியின் பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டன.
அவர் எங்கே சென்றார் என்பதே தெரியாமல் இருந்த நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக உலா வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியானது.
பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப கொடுக்காமல் தப்பியதோடு மட்டுமல்லாமல், லண்டனில் நீரவ் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரிய வந்ததால் இந்தியாவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்ற, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது.
இதனையடுத்து விரைந்து கைது செய்ய்பட்ட நீரவ் மோடி, தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நீரவ் மோடியின் ஜாமின் ஏற்கனவே மூன்று முறை தள்ளுபடியான நிலையில, நான்காவது முறையாக சமீபத்தில் மீண்டும் விசாரிக்கப்பட்டது.
அப்போது வாதிட்ட பிரிட்டன் அரசு தரப்பு நீரவ் மோடியை ஜாமினில் விட்டால் சாட்சிகளை மிரட்டுவார், சரணடைய மாட்டார் என்று கூறப்பட்டது. இதனை மறுத்த நீரவ் மோடி தரப்பு வழக்கறிஞர் லண்டனை விட அவருக்கு பாதுகாப்பான இடம் வேறு கிடையாது. எனவே அவர் எங்கும் தப்பி செல்ல மாட்டார் என கூறினார். விசாரணை முடிந்த நிலையில் ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது.
தொடர்ந்து 4வது முறையாக நீரவ் மோடியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது . 84 நாட்களுக்கும் மேலாக லண்டன் சிறையில் உள்ள நீரவ் தற்போதாவது தமக்கு ஜாமின் கிடைத்துவிடும் என காத்திருந்தார். ஆனால் அவரை விடுவிப்பதில்லை என்ற தீர்மானத்தோடு இருக்கிறது போலும் லண்டன் நீதிமன்றம்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications