திருப்பம்.. 7 இடங்களில் போட்டியில்லை.. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதிக்காக விட்டுக்கொடுத்த காங்கிரஸ்!
உத்தர பிரதேசத்தில் தற்போது பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி போட்டியிடும் 78 இடங்களில் மொத்தம் 7 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடாது என்று அறிவித்து உள்ளது.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திடீர் திருப்பமாக தற்போது பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி போட்டியிடும் 78 இடங்களில் மொத்தம் 7 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடாது என்று அறிவித்து உள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி - ராஷ்ட்ரிய லோக் தளம் சேர்ந்து போட்டியிடுகிறது.
உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் போட்டியிட உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களில் போட்டியிட இருக்கிறது. மொத்தமுள்ள 80 இடங்களில், 75 இடங்களில் மொத்தம் இந்த இரண்டு கட்சிகளும் போட்டியிட இருக்கிறது. அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி இந்த கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிடுகிறது.
15 தொகுதிகளில் அதிமுகவை நேருக்கு நேர் சந்திக்கும் அமமுக... சொல்லி அடிக்கும் டிடிவி தினகரன்
எதனால்
மொத்தம் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி - ஆர்எல்டி கூட்டணி மொத்தம் 78 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாக நேரு குடும்பத்தினர் எப்போதும் போட்டியிடும் தொகுதியான ரேபரேலி, அமேதியில் தொகுதிகளில் இந்த கட்சிகள் போட்டியிடவில்லை. மரியாதை நிமித்தமாக அந்த இடங்களை பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி - ஆர்எல்டி கூட்டணி தவிர்த்துள்ளது.
7 தொகுதிகள்
இந்த நிலையில் காங்கிரஸ் தற்போது பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி போட்டியிடும் இடங்களில் மொத்தம் 7 இடங்களில் போட்டியிடாது என்று அறிவித்து உள்ளது. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி போட்டியிடாத இரண்டு தொகுதிகளுக்கு கைமாறாக 7 தொகுதிகளை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முடிவெடுத்து உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.
என்ன இடங்கள்
மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் சமாஜ்வாதி முன்னாள் தலைவர் முலாயம் போட்டியிடும் மைன்புரி தொகுதி, அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடும் கன்னாஜ் தொகுதி, ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் அஜித் சிங் மற்றும் ஜெயந்த் சவுத்திரி போட்டியிடும் தொகுதிகள், மாயாவதி போட்டியிடும் ராஜ் பாப்பார் தொகுதி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது என்று கூறியுள்ளது.
நெருக்கம் ஏற்பட்டுள்ளது
இது தற்போது பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு பின் தொங்கு சட்டசபை உருவாகும் நிலையில், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க கூட வாய்ப்பு இருக்கிறது.