அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா! என்ன விதிமுறைகள்? யாருக்கு அனுமதி இல்லை?
லக்னோ: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு வருவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி செய்து வைத்தார். இந்த பணிகள் தீவிரமடைந்துள்ளது.

ரூ 1800 கோடி மதிப்பீட்டில் இந்த கோயில் கட்டுமான பணிகள் நடந்து வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும் கொண்டுள்ளது.
புயல், மழை, வெள்ளம், நில நடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து பாதுகாக்கும் விதமாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் கும்பாபிஷேகத்திற்காக பல்வேறு நாடுகளில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. இந்த விழாவுக்காக வெளிநாடு, இந்தியாவிலிருந்து 4000 துறவிகளுக்கும் 3000 விவிஐபிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துக கொள்கிறார். ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பர் ராய் விருந்தினர்கள் எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்பதற்கான வழிமுறைகள் குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது கோரிக்கை கடிதத்தில் மக்கள் சிரமப்படாமல் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அனைவருமே பக்தர்களாகவே நுழைந்து செல்ல வேண்டும், விஐபிகளுக்கு என எந்த சலுகையும் கிடையாது. விருந்தினர்களுக்கான தங்குமிடம், உணவுகள் ஏற்பாடு செய்யப்படும். ராமரை பார்க்க செல்லும் போது கோயில் வளாகத்தில் செல்போன், கேமரா போன்றவற்றை எடுத்துச் செல்லக்கூடாது.
அயோத்திக்கு பார்வையாளர்கள் செல்ல ஜனவரி 20ஆம் தேதி பிற்பகலில் திட்டமிட வேண்டும். அழைப்பினர்கள் ஆதார் அட்டையை வைத்திருக்க வேண்டும். மொபைல், கேமரா, பர்ஸ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல கூடாது. காலை 11 மணிக்கு மைதானத்திற்குள் நுழைய வேண்டும். பிரான் பிரதிஷ்டை விழா 3 மணி நேரத்திற்கு மேல் நடக்கும்.
ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே அந்த இடத்தை அடையலாம். நோய் வாய்பட்டவர்கள், நடக்க முடியாதவர்கள் அல்லது வயதானவர்கள் ஆகியோர் கும்பாபிஷேக நாளில் வரக் கூடாது. பிப்ரவரி மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அழைப்புக் கடிதத்தில் ஒருவர் மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள். உடன் வந்தவர்களுக்கு அனுமதி இல்லை.
எந்த குழந்தைக்கு அனுமதி இல்லை. பிரதமர் நரேந்திர மோடி ஆலயத்தை விட்டு வெளியே சென்ற பிறகு அழைப்பாளர்கள் ஒவ்வொருவராக குழந்தை ராமரை தரிசனம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications