ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்.. பாதுகாப்பை அதிகரித்த போலீஸ்!
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் வீடியோ பதிவு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள இஸ்லாமிய வழிபாட்டுதளமான ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தைச் சேர்ந்த 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கூடிய கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு, மசூதியில் 3 நாட்கள் ஆய்வு நடத்தியது.

சிவலிங்கம் கண்டுபிடிப்பு?
இந்த ஆய்வின் போது ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைய வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே நீதிமன்ற ஆணையர் நடத்திய ஆய்வின் ஒரு பகுதி அறிக்கை மட்டும் வெளியே கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிபதிக்கு மிரட்டல்
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வீடியோ பதிவு செய்து ஆய்வு நடத்த உத்தரவிட்ட நீதிபதி ரவிக்குமார் திவாகருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் இஸ்லாமிய ஆகாஸ் இயக்கத்தைச் சேர்ந்த காசிஃப் அஹ்மத் சித்திக் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது?
அந்தக் கடிதத்தில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்துவது வழக்கமான நடைமுறைதான் என்று கூறுகிறீர்கள். நீங்கள் ஒரு இந்துமத வழிப்பாட்டாளர். மசூதியை கோயிலாக அறிவிப்பீர்கள். ஒரு இந்து நீதிபதியிடம் இருந்து எந்தவொரு இஸ்லாமியரும் நீதியை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் தீவிர விசாரணை
இதுகுறித்து நீதிபதி ரவிக்குமார் திவாகர் போலீஸாரிடம் புகாரளித்துள்ளார். இந்த புகார் குறித்து துணை ஆணையர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நீதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 9 போலீஸார் நீதிபதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட்கு வருகின்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications