Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி. முதல்வர் அல்லது பிரதமர்தான்-ஜனாதிபதி பதவி என் கனவு லிஸ்ட்டிலேயே இல்லை-மாயாவதி அடேங்கப்பா பதில்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பதவி ஏற்க வேன்டும் அல்லது நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான் என் கனவு; ஜனாதிபதியாக வேண்டும் என்பது எல்லாம் நான் நினைக்காதது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விளக்கம் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் உள்ளிட்டவை கடுமையாக மோதிக் கொண்டன. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபாடு காட்டவில்லை. பெயரளவுக்கு வேட்பாளர்களை அறிவித்து ஒதுங்கிக் கொண்டது.

உ.பி. தேர்தல் மாயாவதி

உ.பி. தேர்தல் மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் தீவிர தேர்தல் பிரசாரமும் செய்யவில்லை. அதனால் மாயாவதியின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. மாயாவதி மீதான வழக்குகளை முன்வைத்து மத்திய அரசு மிரட்டிவிட்டது; அதனால் மாயாவதி, பாஜகவை வெல்ல வைக்க அமைதி காக்கிறார் என காங்கிரஸ் தலைவர் சாடினர்.

அகிலேஷ் தாக்குதல்

அகிலேஷ் தாக்குதல்

இதில் ஒருபடிமேலே சென்று விமர்சித்தவர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். மாயாவதிக்கு ஜனாதிபதி பதவியை தரப் போகிறது பாஜக. அதனால்தான் மாயாவதி மவுனமாக இருக்கிறார். பாஜகவை வெல்ல வைக்க மாயாவதி அமைதி காக்கிறார் என விமர்சித்தார். இதற்கும் கூட பெரிய அளவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் பதில்களும் வரவில்லை.

மாயாவதி விமர்சனம்

மாயாவதி விமர்சனம்

உ.பி. தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது; இருந்தாலும் பல தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியை ஏற்படுத்தியிருந்தது. பகுஜன் சமாஜ் படுதோல்வியடைந்த போதும் அகிலேஷ் யாதாவையே மாயாவதி விமர்சித்திருந்தார். சமாஜ்வாதி கட்சியை முஸ்லிம்கள் நம்பி வாக்களித்துவிட்டதாகவும் மாயாவதி கூறியிருந்தார்.இந்நிலையில் மாயாவதியை அகிலேஷ் யாதவ் மீண்டும் விமர்சித்திருந்தார். அடுத்த சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில் மீண்டும் மாயாவதியின் தலையை அகிலேஷ் யாதவ் உருட்டத் தொடங்கினார். பாஜகவின் விருப்பப்படி மாயாவதி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார்.

என் கனவுகள்..மாயாவதி

என் கனவுகள்..மாயாவதி

இதற்கு மாயாவதி அளித்த பதில்: என்னைப் பொறுத்தவரை உ.பி.யின் முதல்வராக மீண்டும் பதவியேற்க வேண்டும்; அல்லது நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான் கனவு. ஜனாதிபதி பதவி குறித்து எல்லாம் நான் கனவு கண்டதே இல்லை. உ.பி.யில் பாஜக வெற்றி பெற்றதற்கு சமாஜ்வாதி கட்சிதான் பொறுப்பாக வேண்டும். சமாஜ்வாதி கட்சிக்கு என்னை ஜனாதிபதியாக்கிப் பார்க்க வேண்டும் என்கிற கனவு இருக்கிறது போல .இவ்வாறு மாயாவதி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+