சில ஆயிரம் போஸ்டிங்தான்.. 36 லட்சம் பேருக்கு வேலை இல்லை! உ.பி அரசு மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் PET தேர்வு எழுத முக்கிய நகரங்களில் இளைஞர்கள் கூடியதால் நேற்று (அக்.16) மாநிலத்தின் பல ரயில் நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
போதிய ரயில்கள் இயக்கப்படாததால் இளைஞர்கள் ஒரே ரயிலில் நெரிசலோடு பயணித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.
இது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

தேர்வு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 'உத்தரப் பிரதேச துணைப் பணியாளர் தேர்வாணையத்தின்' (UPSSSC) முதல்நிலை தகுதித் தேர்வு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த தேர்வுகள் காலை 10-12 மணி வரையிலும் பிற்பகல் 3-5 மணி வரையிலும் நடைபெற்றன. இவ்வாறு இருக்கையில் தேர்வு மையங்கள் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்தால் தேர்வை முடித்து வீடு திரும்ப இளைஞர்கள் ரயிலில் நெரிசலாக பயணித்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.

37 லட்சம் பேர்
அதாவது, ரயிலில் இடம் பிடிப்பதற்கு முந்தியடித்துக்கொண்டு இளைஞர்கள் ஏறியுள்ளனர். இடம் கிடைக்காதவர்கள் படிகளிலும், கம்பியை பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டும் ஆபத்தான முறையில் பயணித்திருக்கின்றனர். மேலும், ஏசி பெட்டிகளையும், பொருட்களை ஏற்றிச்செல்லும் பெட்டிகளையும் அவர்கள் ஆக்கிரமித்தனர். போதிய ரயில்கள் ஏற்பாடு செய்யப்படாததே இந்த நெரிசலுக்கு காரணம் என இளைஞர்கள் குற்றம்சாட்டினர். இந்த தேர்வுக்கு சுமார் 37.58 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்துள்ளனர். இதில் 25.11 லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். 12.46 லட்சம் பேர் அதாவது 33% பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. முறையான போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படாததன் காரணமாகதான் இவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லையென சொல்லப்படுகிறது.

2 கோடி வேலை
இது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். "ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என பாஜக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது இளைஞர்கள் வேலையில்லாமல் ஆதரவற்ற நிலையில் இருப்பதை காண முடிகிறது. இதை கண்டும் காணாதது போல் பிரதமர் அமைதியாக இருக்கிறார்." என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். தேர்வுக்கு போதிய போக்குவரத்து முன்னேற்பாடுகள் செய்யப்படாததாலும், வெள்ளம் பல இடங்களை சூழ்ந்துள்ளதாலும் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ப.சிதம்பரம் ட்வீட்
தற்போது இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவர் கூறியுள்ளதாவது, "உத்தரப் பிரதேசத்தில் சில ஆயிரம் காலி இடங்களுக்கு 37 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் அதிகபட்சமாக 1 லட்சம் பேர் தேர்வானாலும் கூட மீதமுள்ள 36 லட்சம் பேர் வேலையில்லாமல்தான் இருப்பார்கள் என்பதை பாஜவும், யோகி ஆதித்யநாத்தும் ஒப்புக்கொள்வார்களா?

சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயம்
மத்தியிலும், மாநிலத்திலும் என இரட்டை என்ஜின் ஆட்சி என்று கூறிகொண்ட அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? உத்தரப் பிரதேசத்திற்கு இதுபோன்ற பயனற்ற இரட்டை என்ஜின் ஆட்சி வேண்டியதில்லை. மாறாக வேலை வாய்ப்பு, மத நல்லிணக்கம் மற்றும் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் திறமையான அரசாங்கம் தேவை. தற்போதைய யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் சிந்தனைக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் இவை." என்று ட்விட்டரில் சிதம்பரம் விமர்சனம் கூறியுள்ளார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications