உ.பி.யை அச்சுறுத்தும் மர்ம வைரஸ் காய்ச்சல்.. 400 பேருக்கு சிகிச்சை.. குழந்தைகளுக்கும் ஆபத்து!
லக்னோ: உத்தர பிரதசத்தில் மர்ம வைரஸ் காய்ச்சலால் 400-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளையும் தாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனாவை இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. பல மாநிலங்களில் கொரோனா குறைந்து விட்டாலும் கேரளா, மகாராஷ்டிராவில் தொற்று குறையவில்லை.
கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் முந்தைய அலையை விட அதிகமாக இருக்கும் குறிப்பாக குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மர்ம வைரஸ் காய்ச்சல்
கொரோனாவே முழுமையாக அழியாத நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு வைரஸ் நோய்களால் 400-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது. 40 குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளின் பிரிவில் மட்டும் 20 சதவீத நோயாளிகள் காய்ச்சல், சளியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

15 சதவீதம் அதிகரிப்பு
கடந்த மாதம் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 5 சதவீதமாக இருந்தது. கடந்த வாரத்தில் வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. பல்ராம்பூர் மருத்துவமனை, சிவில் மருத்துவமனை மற்றும் லோஹியா இன்ஸ்டிடியூட் மருத்துவமனை ஆகிய முக்கிய மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காநகர் பவுராவ் தியோராஸ், ராணி லக்ஷ்மிபாய், லோக்பந்து, ராம் சாகர் மிஸ்ரா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குழந்தைகள்
குழந்தைகள் சிகிச்சை பிரிவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர்கள். லோஹியா மருத்துவமனையில் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவில் நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் டெங்கு, மலேரியா, டைபாய்டு ஆகிய நோய்க்களுக்கான பரிசோதனைகளின் எண்ணிக்கை இயல்பை விட அதிகமாக உள்ளது. பவுராவ் தியோராஸ் மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் சிகிச்சை பிரிவு முழுவதுமாக நிரம்பியுள்ளன.

காய்ச்சல் ஏற்படுவது ஏன்?
இந்த மர்ம வைரஸ் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது? என்று முழுமையாக தெரியவில்லை. இது தொடர்பாக சிவில் மருத்துவமனை இயக்குநர் சி.கே.நந்தா கூறுகையில், ' வானிலை வேகமாக மாறுகிறது. வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், வளிமண்டலத்தின் கீழ் மேற்பரப்பில் வைரஸ்கள் உள்ளன. வைரஸ் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வைரஸ் காய்ச்சல் மற்றும் பிற தொடர்புடைய நோய்களில் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. டெங்கு நோய் பாதிப்பும் இருக்கிறது' என்று கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications