பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு... லோக்ஆயுக்தாவில் துணை தலைவர் பதவி
லக்னோ: கடந்த ஆண்டு பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த ஓய்வுபெற்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ்க்கு, உத்தரப் பிரதேச லோக்ஆயுக்தாவில் துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு லோக்ஆயுக்தா. அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களையும் இந்த லோக்ஆயுக்தா அமைப்புகளால் விசாரிக்க முடியும்.

நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த லோக்ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் லோக்ஆயுக்தா அமைப்புக்கு ஒரு தலைவரும், 3 துணைநிலை தலைவர்களும் இருப்பார்கள். இவர்களால் அதிகபட்சம் எட்டு ஆண்டுகள் வரை இந்த அமைப்புகளில் தலைவர்களாக இருக்க முடியும்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் 3ஆவது துணைநிலை லோக்ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவை அம்மாநில ஆளுநர் நியமித்தார். இதையடுத்து அவர் நேற்று துணைநிலை லோக்ஆயுக்தா தலைவராகப் பதவியேற்றார். அவருக்கு லோக்ஆயுக்தா தலைவர் சஞ்சய் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்தியாவில் பல ஆண்டுகளாக நடைபெற்ற வந்த பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்தவர் தான் இந்த நீதிபதி சுரேந்திர குமார் யாதவ். கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி கல்யான் சிங் என 32 பேரையும் பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications