பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு... லோக்ஆயுக்தாவில் துணை தலைவர் பதவி
லக்னோ: கடந்த ஆண்டு பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த ஓய்வுபெற்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ்க்கு, உத்தரப் பிரதேச லோக்ஆயுக்தாவில் துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு லோக்ஆயுக்தா. அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களையும் இந்த லோக்ஆயுக்தா அமைப்புகளால் விசாரிக்க முடியும்.

நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த லோக்ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் லோக்ஆயுக்தா அமைப்புக்கு ஒரு தலைவரும், 3 துணைநிலை தலைவர்களும் இருப்பார்கள். இவர்களால் அதிகபட்சம் எட்டு ஆண்டுகள் வரை இந்த அமைப்புகளில் தலைவர்களாக இருக்க முடியும்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் 3ஆவது துணைநிலை லோக்ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவை அம்மாநில ஆளுநர் நியமித்தார். இதையடுத்து அவர் நேற்று துணைநிலை லோக்ஆயுக்தா தலைவராகப் பதவியேற்றார். அவருக்கு லோக்ஆயுக்தா தலைவர் சஞ்சய் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்தியாவில் பல ஆண்டுகளாக நடைபெற்ற வந்த பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்தவர் தான் இந்த நீதிபதி சுரேந்திர குமார் யாதவ். கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி கல்யான் சிங் என 32 பேரையும் பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications