நாம் பெரும் சக்தி! இந்தியா, பாகிஸ்தானை ஒன்றாக ஒப்பிட்ட காலம் முடிந்துவிட்டது.. அமைச்சர் ஜெய்சங்கர்
லக்னோ: இந்தியாவையும், பாகிஸ்தானையும் இந்த உலகம் ஒன்றாக பார்த்த காலம் மலையேறிவிட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
ஆசிய பிராந்தியத்தில் இன்று தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கும் இந்தியாவை, வல்லரசு நாடுகளுடன் உலகம் ஒப்பிட்டு பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா அடைந்திருக்கும் அசுர வளர்ச்சி உலகுக்கே ஆச்சரியம் அளிப்பதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.

வல்லரசு நாடுகளுக்கு இணையான வளர்ச்சி
உத்தரபிரதேச மாநிலம் காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த காசி தமிழ் சங்கமம் கண்காட்சியை ஜெய்சங்கர் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: 1947-இல் சுதந்திரம் அடைந்த போது இருந்த இந்தியாவுக்கும், இப்போது இருக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வித்தியாசம் மலைப்பை ஏற்படுத்துகிறது. உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்தியா, 70 நாடுகளில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளர்ந்திருப்பதை அசுர வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியாவும், பாகிஸ்தானும்
நான் உங்கள் (மாணவர்கள்) வயதில் இருக்கும் போது, இந்தியாவையும், பாகிஸ்தானையும் இந்த உலகம் ஒரே தட்டில் வைத்து பார்த்தது. பொருளாதார ரீதியாகவும் சரி.. பாதுகாப்புத் துறையிலும் சரி.. இரண்டு நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருந்தன. ஆனால், இன்று நாம் இருக்கும் நிலைமையே வேறு. ஆசிய கண்டத்திலேயே தவிர்க்க முடியாத பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானும் இந்தியாவையும் ஒப்பிட்ட உலக நாடுகள், இன்றைக்கு இந்தியாவையும் வல்லரசு நாடுகளையும் ஒப்பிட்டு பேசி வருகின்றன.

ஐடி துறையில் முதுகெலும்பு
உலக அளவில் 5-வது பொருளாதார சக்தியாக இந்தியா உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் உலகிலேயே இந்தியாதான் கோலோச்சி வருகிறது. 10-15 ஆண்டுகளுக்கு முன்பு கூட, தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா உலகின் பின்வாசலில் இருந்தது. ஆனால் இன்று இந்தியர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறார்கள். இந்தியர்களின் திறமையை உலகம் கண்டறிந்து அங்கீகரித்து வருகிறது.

மோடி ஆட்சியில் அசுர வளர்ச்சி
இந்தியாவின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு இந்தியர்கள் வழங்கும் பங்களிப்பு சாதாரணமானது அல்ல. இந்தியா இத்தகைய வளர்ச்சி அடைந்ததற்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அந்த பங்களிப்பை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில், இந்தியா மீதான உலக மக்களின் பார்வை மாறியுள்ளது. இந்த 8 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சி பெற்றிருப்பதை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றன. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications