காங். நிர்வாகிகளை அவமானப்படுத்தினாரா பிரியங்கா காந்தி... பரபரப்பு குற்றச்சாட்டு
லக்னோ: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி தங்களை அமானப்படுத்திவிட்டதாக கூறி, உத்தரப்பிரதேச மாநிலம் படோஹி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் படோஹி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரமாகந்த்தை ஆதரித்து பிரியங்கா காந்தி கடந்த வெள்ளி அன்று பிரச்சாரம் செய்தார்.அப்போது படோஹி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் நீலம் மிஸ்ரா, தங்கள் தொகுதி வேட்பாளர் ரமாகந்த், கட்சி நிர்வாகிகளுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார் என பிரியங்கா காந்தியிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அப்போது, நீலம் மிஸ்ரா மற்றும் அந்த மாவட்டத்தின் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரை பிரியங்கா காந்தி அவமானப்படுத்தும் வகையில் பேசினாராம். இந்த குற்றச்சாட்டை கூறி, நீலம் மிஸ்ரா உட்பட அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து திடீரென விலகிவிட்டனர்.
இதனிடையே அவர்கள் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணி வேட்பாளரான ரங்நாத் மிஸ்ராவுக்கு ஆதரவாக வாக்கு கேட்கவும் முடிவு செய்துள்ளனர். பிரிங்கா காந்தி அவமானப்படுத்தியாக புகார் கூறி சிலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.