உ.பி. தேர்தல்: 300 இடங்களுக்கு மேல் வெல்வோம்.. முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
403 சட்டசபை தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்றைய தினம் 5 ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதுவரை 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுவிட்டது. இந்த நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பலியாவில் கூறுகையில் 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் என்னால் ஒரு விஷயத்தை உறுதியாக சொல்ல முடியும். உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு சாதகமான அலை வீசி வருகிறது.
இதனால் இந்த தேர்தலில் பாஜக நிச்சயம் தனிபெரும்பான்மையை பெறும். ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வென்று ஆட்சியை பிடித்தது. அதே போல் இந்த முறையும் 300 தொகுதிகளுக்கு மேல் இமாலய வெற்றி பெறும் என்றார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டார். இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சியும் மாநில கட்சி என்பதால் இந்த தேர்தலில் எப்படி ஆட்சியை பிடித்து விட வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது.
தேர்தல் கருத்து கணிப்புகள் உ.பியில் பாஜகதான் வெல்லும் என சொல்லியுள்ள நிலையில் உ.பி.யில் ஆட்சி மாற்றம் நிகழுமா இல்லை பாஜக ஆட்சியே தொடருமா என்பது மார்ச் 10 ஆம் தேதி தெரியவரும்.












Click it and Unblock the Notifications